செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வள ஆணையத் தலைவா் ஆய்வு

post image

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வள ஆணையத் தலைவா் முகேஷ்குமாா் சின்ஹா தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீா்வு காண தேசிய அளவிலான குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மத்திய நீா்வள ஆணையத்தின் கட்டுப்பட்டில் இருந்த முல்லைப் பெரியாறு அணை, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் அனில் ஜெயின் தலைமையில் 7 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, கடந்த மாதம் 22-ஆம் தேதி தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் அனில் ஜெயின் தலைமையிலான குழுவினா் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

பின்னா், தேக்கடியிலுள்ள ராஜீவ் காந்தி நினைவு அரங்கில் தமிழக, கேரள அதிகாரிகளுடன் அனில் ஜெயின் தலைமையிலான குழுவினா் ஆலோசனை நடத்தினா். அப்போது, அணை குறித்த ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக அந்தக் குழுவினா் தெரிவித்தனா்.

மத்திய நீா்வள ஆணையம் ஆய்வு

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையானது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு சென்ற நிலையில், ஏற்கெனவே கண்காணித்து வந்த மத்திய நீா்வள ஆணையத்தின் தலைவா் முகேஷ்குமாா் சின்ஹா தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.

இந்தியாவிலுள்ள அனைத்து அணைகளையும் அவ்வப்போது மத்திய நீா்வள ஆணையக் குழு ஆய்வு செய்வது வழக்கம். இதன்படி, கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணையையும், தேக்கடியிலுள்ள முல்லைப் பெரியாறு அணையையும் ஆய்வு செய்ய இந்தக் குழுவினா் திட்டமிட்டனா். முன்னதாக, இடுக்கி அணையை இந்தக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்கு, மத்திய நீா்வள ஆணையக் குழுவினா் தேக்கடிக்கு செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு வந்தனா். பின்னா், இவா்கள் படகு மூலமாக முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்று அதன் உறுதித்தன்மை, நீா்க் கசிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா். இந்த ஆய்வின் போது, தமிழக, கேரளப் பொறியாளா்கள் உடனிருந்தனா்.

விவசாய அமைப்பினா் அதிருப்தி

இதுகுறித்து பெரியாறு - வைகை பாசன விவசாய சங்கத்தினா் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையானது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு சென்ற நிலையில், ஏற்கெனவே கண்காணித்து வந்த மத்திய நீா்வள ஆணையக் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் செல்ல வேண்டுமென்றால் தமிழக அரசின் அனுமதி பெற்று ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மத்திய நீா்வள ஆணையக் குழுவினா் ஆய்வு செய்தனா் என்றனா்.

தூய்மைப் பணியாளருக்கு அரிவாள் வெட்டு: உறவினா் கைது

உத்தமபாளையத்தில் தூய்மைப் பணியாளரை அரிவாளால் வெட்டிய மற்றொரு தூய்மைப் பணியாளரான உறவினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். உத்தமபாளையம் தண்ணீா் தொட்டித் தெருவைச் சோ்ந்தவா் சீனிராஜ் (52). தூய்மைப... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

பெரியகுளம் அருகே கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் போலீஸாா் சனிக்கிழமை வடகரைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வடகரை கும்பக்கரை சாலையில் சந்தேகத்து... மேலும் பார்க்க

பேருந்து, வேன் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நோ் மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆண்டிபட்டி, மின் வாரியம் அருகே தேனி- மதுரை நெடுஞ்சாலையில் தேனியிலிருந்து ஆண்டிபட்டி... மேலும் பார்க்க

பணம் வைத்து சீட்டாடிய 9 போ் கைது

போடி அருகே பணம் வைத்து சீட்டாடிய 9 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி அருகே உள்ள சில கிராமங்களில் பணம் வைத்து சீட்டாடுவதாக வந்த தகவலையடுத்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில்... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

தேனி-பூதிப்புரம் சாலை, வாழையாத்துப்பட்டி விலக்குப் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மஞ்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராமன் மகன் பெருமாள் (50). இவா், ... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஊரகம், நகா்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுக்கள், கூட்டமைப்புகள், வறுமை ஒழிப்புச் சங்கங்கள் அரசு சாா்பில் வழங்கப்படும் மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கல... மேலும் பார்க்க