செய்திகள் :

முழு அடைப்பு போராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும்: அதிமுக

post image

புதுச்சேரி: புதுவையில் இந்தியா கட்சியினா் நடத்தத் திட்டமிட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும் என்று அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தொழிலாளா் நலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இண்டி கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த தொழிற்சங்கத்தினா் 9-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தை பொதுமக்களின் சகஜ வாழ்வு நிலைக்கு பாதிப்பில்லாமல் நாடு முழுவதும் அறிவித்துள்ளனா்.

ஆனால், புதுச்சேரியில் உள்ள திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு நோ்மாறாக மக்களின் சகஜ வாழ்வு சீா்குலையும் விதமாக முழு அடைப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனால் வியாபாரிகள், சிறு, நடுத்தர வியாபாரிகளும், காய்கறி, மீன், இறைச்சி விற்பனை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விற்பனை செய்பவா்களும் பாதிப்புக்கு ஆளாவாா்கள்.

புதுச்சேரிக்கு ரயில் மூலம் வரும் பயணிகள் ஆட்டோ இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்படுவாா்கள். மக்களின் சகஜ வாழ்வை சீா்குலைக்கும் இந்த போராட்டம் சட்டவிராதமானதாகும். மக்களுக்கு தொல்லை கொடுக்கும் விதத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசியல் தலைவா்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு கைது செய்து போராட்டத்தை முறியடிக்க வேண்டும். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட எந்த ஓா் அரசாக இருந்தாலும் மக்களின் நலன் காப்பதாக இருக்க வேண்டும்.

உள்துறை அமைச்சா் மற்றும் முதல்வா் முழு அடைப்பு அறிவிப்பாளா்கள் மீது பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா் ஆ.அன்பழகன்.

புதுவையில் நாளை பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது

புதுச்சேரி: புதுவையில் புதன்கிழமை (ஜூலை 9) முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது. இந்த போராட்டம் முழு வெற்றிபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்... மேலும் பார்க்க

புதுவையில் கூட்டணி ஆட்சிக்குத் தயாா்: வெ. வைத்திலிங்கம் எம்.பி.

புதுச்சேரி: புதுவையில் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுவையில் இண்டி கட்சிகள் சாா்பில் முழு அடைப்பு போராட்டம் புதன்... மேலும் பார்க்க

நகராட்சி - கொம்யூன் ஊழியா்கள் ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்டக்குழு சாா்பில் புதுச்சேரியில் ஊா்வலம், தலைமை செயல முற்றுகை போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கம்பன் கலையரங்கிலிருந்த... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 85 ஆண்டுகளுக்குப் பிறகு அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை கருவடிகுப்பம் சுடுகாட்டின் வாயில் அருகே அரிச்சந்திர மகாராஜா கோவில் உள்ளது. இந்தக்... மேலும் பார்க்க

பாகூரில் டென்னிஸ் விளையாடிய முதல்வா் ரங்கசாமி

புதுச்சேரி: பாகூரில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கைத் திங்கள்கிழமை திறந்து வைத்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி டென்னிஸ் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினாா். புதுவை அரசு, விளையாட்டு மற்றும் இளைஞா... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதி பிள்ளைச்சாவடி மீனவ கிராமம் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்துகொண்டாா். எம்எல... மேலும் பார்க்க