செய்திகள் :

முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது உத்தரப் பிரதேசம்: யோகி ஆதித்யநாத்

post image

உத்தரப் பிரதேசம் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை தெரிவித்தார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் சிறப்பு நேர்க்காணலில் பங்கேற்ற உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

”100 ஹிந்து குடும்பங்களுக்கு மத்தியில் வாழும் ஒரு முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறது. அவர்களால் அனைத்து மத ரீதியிலான வழிபாடுகளும் சுதந்திரமாக செய்ய முடிகிறது. ஆனால், 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு மத்தியில் வாழும் 50 ஹிந்து குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்றால் இல்லை. உதாரணம் பாகிஸ்தானும் வங்கதேசமும்தான்.

உத்தரப் பிரதேசம் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் 2017 ஆம் ஆண்டுக்கு முன்னதாக கலவரம் நடைபெற்றிருக்கிறது. ஹிந்து கடைகள் எரிக்கப்பட்டால், முஸ்லிம் கடைகள் எரிக்கப்பட்டது. ஹிந்து வீடுகள் எரிக்கப்பட்டால், முஸ்லிம் வீடுகள் எரிக்கப்பட்டது. ஆனால், 2017-க்கு பிறகு கலவரம் நடைபெறவில்லை. ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.

நான் ஒரு சாதாரண உத்தரபிரதேச குடிமகன். நான் அனைவரின் மகிழ்ச்சியையும் விரும்பும் ஒரு யோகி. அனைவரின் ஆதரவையும் வளர்ச்சியையும் நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

பண்டிகை காலங்களில் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு யோகி பதிலளித்ததாவது:

”ராம நவமி, ரமலான் போன்ற பண்டிகையின்போது நிர்வாகங்களுடன் கலந்துரையாடி வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்கிறோம்.

உத்தரப் பிரதேசத்தில் ஹோலி பண்டிகையின்போது திரைகளால் மசூதிகள் மூடப்பட்டது. மசூதிக்கள் மீது வண்ணம் வீசக் கூடாது என்று கடுமையான வழிகாட்டு நெறிமுறை இருக்கிறது. வண்ணங்கள் யாருக்கும் தீங்கு விளைவிக்காது. முஹரம் பண்டிகையின்போது பேரணிகள் நடத்துகிறார்கள், அவர்களின் கொடியின் நிழல் கோயில் மீது விழுவதில்லையா? அந்த நிழல் ஹிந்துக்கள் வீட்டை அசுத்தமாக்குமா?” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? - இபிஎஸ் விளக்கம்!

முக்கிய வழிபாட்டுத் தலங்களில் நாளைமுதல் மதுவிலக்கு அமல்! - எங்கே?

19 முக்கிய வழிபாட்டுத் தலங்களில் மதுவிலக்கு ஏப். 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.மத்திய பிரதேசத்தில் பிரசித்திபெற்ற 19 வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்லாது, அம... மேலும் பார்க்க

ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!

உத்தரப் பிரதேசத்தில் ரமலான் சிறப்புத் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தியவாறு இஸ்லாமியர்கள் முழக்கங்களை எழுப்பிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது மேலும் பார்க்க

ஏப்ரல் - ஜூன் வெப்ப அலையின் தாக்கம் எத்தனை நாள்கள்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வெப்ப அலையின் தாக்கம் ஏப்ரல் - ஜூன் வரை அதிகமாக இருக்குமென்றும், நாடெங்கிலும் பரவலாக இயல்பைவிட வெய்யில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது.‘வெப்ப-அலை’ எனப்படும் ’வெய்... மேலும் பார்க்க

மோனலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பாலியல் புகாரில் கைது!

மகா கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசா என்ற இளம்பெண்ணுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

இனி அபராதம் செலுத்தவில்லை எனில் ஓட்டுநர் உரிமம் ரத்து! - வருகிறது புதிய விதிகள்!!

சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 3 மாதங்களுக்குள் செலுத்தவில்லை என்றால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலைகள... மேலும் பார்க்க

மோடி அரசால் வணிகமயமாகும் கல்வி முறை! -சோனியா காந்தி

புது தில்லி: மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ‘கல்வித்துறையில் அதிகாரம், வணிகமயமாக்கல், வகுப்புவாதம் (சென்ட்ரலைசேசன், கமர்சியலைசேசன... மேலும் பார்க்க