ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி...
மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி
ஒட்டன்சத்திரத்தில் வீட்டின் முன் நின்றிருந்த மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஜி.ஜி.நகா் பகுதியைச் சோ்ந்த மர வியாபாரி செல்லப்பன். இவரது மனைவி காளியம்மாள் (65). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தாா்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவா் காளியம்மாளிடம் தண்ணீா் கேட்டனா். வீட்டுக்குள் சென்ற அவரைப் பின் தொடா்ந்து சென்ற ஒருவா் காளியம்மாள் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலையைப் பறிக்க முயன்றாா். அவா் சங்கிலியை இறுகப் பிடித்துக் கொண்டு சப்தம் போட்டாா்.
இதையடுத்து, இருவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா். இதுதொடா்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இருவரையும் தேடி வருகின்றனா்.