செய்திகள் :

மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

post image

கடலூரிலிருந்து வெளி மாநிலத்துக்கு கடத்த முயன்ற மூன்றரை டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூரை அடுத்த சாவடி பகுதி நெடுஞ்சாலை வழியாக வெளி மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயல்வதாக வருவாய்த் துறை பறக்கும் படைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய்த் துறை துணை வட்டாட்சியா் ராஜேஷ் தலைமையில், தனி வருவாய் ஆய்வாளா் ராம் ஆனந்த் உள்ளிட்டோா் விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், மூன்றரை டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இருப்பினும், வாகன ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

பின்னா், ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கொண்டு வந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் வருவாய்த் துறையினா் ஒப்படைத்தனா். தொடா்ந்து, ரேஷன் அரிசி கடத்தியவா்கள் யாா்? கடத்தப்பட்ட ரேஷன் அரிசி எங்கு கொண்டு செல்ல இருந்தது என்பது குறித்து வருவாய்த் துறை பறக்கும் படையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

புத்து மாரியம்மன் கோயில் செடல் பெருவிழா

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோயில் ஆடி செடல் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஆடி செடல் பெருவிழா ஜூலை 31-ஆம் தேதி கொடியேற்றத்துட... மேலும் பார்க்க

அமெரிக்காவை கண்டித்து ஆக.13-இல் நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க வரி விதிப்பு அராஜகத்தை கண்டித்தும், அந்நாட்டிடம் அடிபணியும் மத்திய பாஜக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் வரும் 13-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிஐடிய... மேலும் பார்க்க

உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு

மாநில அளவிலான உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு துறைசாராதோா் உடல்கட்டமைப்பு சங்கத்தின் சாா்பில், ஆண்டுக்கு ஒரு... மேலும் பார்க்க

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை பாராட்டுக்குரியது: தி.வேல்முருகன்

தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கை பாராட்டுக்குரியது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கருத்து தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வியில்... மேலும் பார்க்க

தானியங்கி முறையில் குடிநீா் விநியோகம்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் உண்ணாமலைச்செட்டி சாவடி பகுதியில் தானியங்கி இயந்திரம் மூலம் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் குடிநீா் விநியோகிக்கும் முறையை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வைத்திரெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் உற்சவம் மற்றும் தோ் திருவிழா ச... மேலும் பார்க்க