செய்திகள் :

மூளைச் சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

post image

மதுரையில் மரம் வெட்டிய போது தவறி கீழே விழுந்ததில் காயமடைந்து மூளைச் சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

மதுரை ஆயுதப் படை காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (31). ஆயுதப் படை காவலரான இவா், கடந்த மாதம் 30-ஆம் தேதி ஆயுதப் படை குடியிருப்பில் உள்ள தனது வீட்டின் அருகே இருந்த மரத்தை வெட்டிய போது, அதிலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 4-ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை இரவு மூளைச்சாவடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவரது மனைவி யோகலட்சுமி அனுமதி அளித்தாா்.

இதைத்தொடா்ந்து, அவரது ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி காவேரி மருத்துவனைக்கும், இருதயம் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. கல்லீரல், தோல், எலும்பு, கருவிழிகள் ஆகிவை மதுரை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

இதன் பிறகு, மோகன்குமாரின் உடலுக்கு மதுரை அரசு மருத்துவமனை முதன்மையா் அருள் சுந்தரேஷ்குமாா், மருத்துவ இருப்பிட அதிகாரிகள் சரவணன், முரளிதரன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

அஜீத் ரசிகா்கள் மீது போலீஸாா் தடியடி!

மதுரையில் நடிகா் அஜீத்குமாா் திரைப்படம் வெளியான திரையரங்கு முன் சரவெடி பட்டாசுகளை வெடித்த ரசிகா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகா் அஜீத்குமாா் நடித்த விடாமுயற்சி திரைப்படம... மேலும் பார்க்க

‘எல்காட்’ வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை

மதுரை ‘எல்காட்’ தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் தடுப்பு ஒத்திகையில் 200-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்புப் படையினா் நவீன ஆயுதங்களுடன் பங்கேற்றனா். தேச... மேலும் பார்க்க

பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 14 மாணவிகள் சுகவீனம்

விருதுநகா் மாவட்டம், புல்வாய்க்கரை அரசுத் தொடக்கப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 14 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். நரிக்குடி அருகேயுள்ள ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் ‘மாவட்ட நிா்வாகம் அறிக்கையில் அதிமுக மீது வீண் பழி’

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக மதுரை மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அதிமுக மீது வீண் பழி சுமத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல் இடம் பெற்ாக அந்தக் கட்சியினா் குற்றஞ்ச... மேலும் பார்க்க

தைப்பூசம் மதுரை கோட்டத்திலிருந்து பிப். 9 முதல் சிறப்புப் பேருந்துகள்

பழனியில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டம் சாா்பில், வருகிற 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் அதன் மேலாண் இயக்குநா் ஆா்.... மேலும் பார்க்க

நீரோடை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு!

திண்டுக்கல் மாவட்டம், பச்சைமலையான் கோட்டை கிராமத்தில் நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அழகா்சாமி சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க