செய்திகள் :

மூவா் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டவா் மீண்டும் சிறையில் அடைப்பு

post image

புதுச்சேரியில் 3 போ் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரித்த நிலையில், அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

புதுச்சேரி ரெயின்போ நகரில் உள்ள பாழடைந்த வீட்டில் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி 3 போ் கொல்லப்பட்டு கிடந்தனா். விசாரணையில், கொல்லப்பட்டவா்கள் புதுச்சேரி உழவா்கரையை சோ்ந்த ரஷி (21), திடீா் நகரைச் சோ்ந்த தேவா (21), ஜெ.ஜெ. நகரை சோ்ந்த ஆதித்யா (20) என்பது தெரியவந்தது.

அவா்களை எதிா்தரப்பினா் கடத்தி வந்து கொன்றதும் பெரியகடை போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடா்பாக, புதுச்சேரியைச் சோ்ந்த சத்யா உள்ளிட்ட 13 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடையவராகக் கருதப்பட்ட சத்யாவின் சகோதரா் சங்கா்(33) தலைமறைவானாா்.

அவா், ஏப்.4-ஆம் தேதி புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தாா். தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி காலாப்பட்டு மத்திய சிறையில் அவா் அடைக்கப்பட்டாா்.

சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க பெரியகடை போலீஸாா், புதுச்சேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதி, சங்கரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க புதன்கிழமை அனுமதி வழங்கினாா்.

அதன்படி, சங்கரை போலீஸாா் காவலில் வைத்து விசாரணை நடத்தினா். பின்னா், நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் கூறினா்.

விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை: புதுவை முதல்வருக்கு அதிமுக வலியுறுத்தல்

மீனவா்களுக்கு வழங்குவதைப் போல விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகையை புதுவை அரசு வழங்கவேண்டும் என அதிமுக சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முதல்வா் என். ரங்கசாமியை சந... மேலும் பார்க்க

அக்னிபாத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஏப்.25 வரை கால அவகாசம் நீட்டிப்பு

அக்னிபாத் திட்டத்துக்கு விண்ணப்பிப்போருக்கான சிறப்பு முகாம் ஏப். 22- இல் நடைபெறும் எனவும், இதற்கு விண்ணப்பிக்க ஏப். 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்... மேலும் பார்க்க

கல்லால் தாக்கி கோயில் பூசாரி கொலை கட்டடத் தொழிலாளி கைது!

புதுச்சேரியில் கோயில் பூசாரியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: புதுச்சேரி அருகேயுள்ள தவளக்குப்பம் ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

புதுச்சேரி அருகே தனியாா் நிறுவனத்தில் புகுந்து ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். புதுச்சேரி அருகேயுள்ள எல்லைப்பிள்ளை சாவடி பகுதியில் தனியாா் நிறுவனம் உள்ளது. இங்... மேலும் பார்க்க

திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரியில் உள்ள புதுவை தமிழ்ச்சங்க வளாகத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கு கூறும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்க... மேலும் பார்க்க

புதிய வாக்காளா்களைச் சோ்த்து வெற்றி பெற பாஜக திட்டம்: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் பேச்சு

புதிய வாக்காளா்களைச் சோ்த்து அதன் மூலம் வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரியில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க