செய்திகள் :

மெக்சிகோ தக்காளிக்கு 17% வரி விதித்த ட்ரம்ப்.. நஷ்டம் யாருக்கு?

post image

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மெக்சிகோ தக்காளிகள் மீது 17 சதவிகித வரியை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், அமெரிக்கா ஏப்ரல் மாதம் அறிவித்த வரி விதிப்பு அமலுக்கு வருகிறது என்று கூறப்படுகிறது.

தக்காளி
தக்காளி

அமெரிக்கா உடன் புதிதாக வர்த்தகம் போடும் நாடுகளுக்கு, வரி குறைக்கப்பட உள்ளது. இதற்காக, பல நாடுகளும் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால், இது தொடர்பாக, மெக்சிகோ நடத்திய பேச்சுவார்த்தை கைக்கூடவில்லை.

இந்த நிலையில், ட்ரம்ப் மெக்சிகோ தக்காளிகள் மீது 17 சதவிகித வரி விதித்துள்ளார். இது அமெரிக்கா விவசாயிகளுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்று அமெரிக்காவின் வணிகத் துறை கூறுகிறது.

அமெரிக்காவும் தக்காளியும்

அமெரிக்காவை பொறுத்தவரை, தக்காளி என்பது மிக மிக முக்கியமான உணவு ஆகும்.

அவர்களது பீட்சா, சாஸ் தொடங்கி பெரும்பாலான உணவுகளில் தக்காளி கட்டாயம் இடம்பெற்றிருக்கும். இப்படியிருக்கையில், தக்காளி மீது வரி என்பது மெக்சிகோவிற்கு எப்படி பலத்த அடியோ, அதே மாதிரி அமெரிக்காவிற்கு அடி தான்.

அமெரிக்காவிற்கான தேவையான 70 சதவிகித தக்காளி மெக்சிகோவில் இருந்து தான் வருகிறது. அமெரிக்க விவசாயிகளின் தக்காளியை விட, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தக்காளியின் விலை குறைவு.

தக்காளி சாஸ்

அதனால், பெரும்பாலும் தக்காளி மெக்சிகோவிற்கு இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்.

இதற்கு தான் தற்போது ட்ரம்ப் கடிவாளம் கட்டி உள்ளார். இந்த வரி நேற்று முதல் அமலுக்கு வந்துவிட்டது.

'இது அமெரிக்க தக்காளி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நல்ல விஷயம்' என்று ஆதரவும், 'அமெரிக்காவின் முக்கிய உணவுப்பொருள்களில் ஒன்றான தக்காளி மீது வரி விதிப்பது தவறு' என்று எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

`போரை நிறுத்துங்கள்; இல்லை..' - புதினை எச்சரிக்கும் ட்ரம்ப்; இதில் இந்தியாவிற்கு பாதிப்பு என்ன?

அதிபர் ஆவதற்கு முன்பும் சரி... பிறகும் சரி... ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர படாதபாடுப்பட்டு வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால், புதினை ப... மேலும் பார்க்க

``வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்; நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லுமா?'' - காங்கிரஸ் கேள்வி

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி' மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தல் ஆணைய... மேலும் பார்க்க

ஒமர் அப்துல்லா விவகாரம்: ``இது எந்த மாநில முதல்வருக்கும் நடக்கலாம்.." - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

காஷ்மீரின் ஸ்ரீநகரில் அமைந்துள்ள தியாகிகள் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தச் சென்றார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. அப்போது அவரைத் தடுத்த காவல்துறை அதிகாரிகள், அவரை நினைவிடத்துக்குள் செல்ல வி... மேலும் பார்க்க

Beauty: தாமரை இலை ஃபேஸ் மாஸ்க்; ட்ரெண்டிங்காகும் வீடியோவும் மருத்துவரின் ஆலோசனையும்..!

சுட்டெரிக்கும் வெயிலிலும், வாகன புகைகளுக்கு இடையேயான தூசுகளிலும் இருந்து நம் முகப்பொலிவை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு அனைவரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. இதற்காக, க்ளென்சர், டோனர், சீரம், சன் ஸ்க... மேலும் பார்க்க

OPS: ``மதுரையில் மாநாடு; அங்கே ஒரு முக்கிய முடிவு!'' - என்ன சொல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?

அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தார்.OPSஅதில் பேசிய ஓ.பி.எஸ், "அரசியல்ரீதியான கட்சிகளுக்... மேலும் பார்க்க

TVK Vijay: ``மதுரையில் மாநாடு நடத்த நினைக்கிறார்கள்; ஆனால்..'' - செல்லூர் ராஜூ சொல்வதென்ன?

மதுரையில் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது, "முருகப்பெருமானின் முதல் படை வீட்டில் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழாவிற்கு மாவட்டம் முழுக்... மேலும் பார்க்க