செய்திகள் :

மெட்டா நிறுவனத்தை எச்சரிக்கும் நேபாளம்! காரணம் என்ன?

post image

நேபாள அரசு மெட்டா தொழிநுட்ப நிறுவனத்துக்கு கால அவகாசம் கொடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரபல சமூக ஊடகங்க செயலிகளான முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, நேபாள சட்டத்துக்கு உள்பட்டு 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு மெட்டா நிறுவனம் உடன்படவில்லை என்றால் அந்நாடு முழுவதும் அதன் செயலிகள் தடைசெய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய தகவல் ஆணையம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய நேபாள தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரிதிவி சுப்பா குருங் கூறியதாவது:

‘மெட்டா நிறுவனம் நேபாள சட்டத்திற்கு உட்பட்டு அதன் நடவடிக்கைகளை பதிவு செய்ய அரசு பல முறை கேட்டுக்கொண்ட போதிலும் அதற்கு உடன்பட மறுத்து வருகின்றது.

மேலும், அவர்களுக்கு மூன்றாவது முறை அனுப்பப்பட்ட நோட்டீஸின் காலக்கெடு முடிந்த நிலையில் 7 நாள்களுக்குள் அந்நிறுவனம் பதிவு செய்யவில்லை என்றால் அதன் செயலிகள் அனைத்தும் நேபாளத்தில் தடை செய்யப்படும்’ என எச்சரித்துள்ளார்.

முன்னதாக, நேபாள அரசு தங்களது நாட்டில் செயல்படும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிவிதிப்பு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தரவு நிர்வாக விதிகள் உள்ளிட்ட அந்நாட்டு சட்டங்களுக்கு உடன்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பகுதியின் உயர் அதிகாரி நேபாளம் விரைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:தாய்லாந்து: கடலில் விழுந்து நொறுங்கிய காவல் விமானம்! 6 பேர் பலி!

கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா்: 9 போ் உயிரிழப்பு!

கனடாவின் வான்கூவா் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா் மோதியதில் 9 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். 16-... மேலும் பார்க்க

உக்ரைன் மீது தொடரும் ரஷியாவின் ‘ட்ரோன்’ தாக்குதல்!

உக்ரைன் நாடு முழுவதும் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து சனிக்கிழமை நள்ளிரவில் 149 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) ஏவி ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில... மேலும் பார்க்க

ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயா்வு!

தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் சுமாா் 1,000 போ் காயமடைந்துள்ளனா். இவா்களை ஈரான்... மேலும் பார்க்க

அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை! வாடிகனில் ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பின் டிரம்ப்!

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு விருப்பமில்லை என்று எண்ணம் எழுவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சந்தேகம் தெரிவித்தாா். போப் பிரான்சிஸின் இறுதிச் சட... மேலும் பார்க்க

இந்தியாவைத் தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாா்! பாகிஸ்தான் அமைச்சா் மிரட்டல்!

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானில் 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும், இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சா் ஹனீஃப் அப்பாசி கூறியது பரபரப்பை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் அதிபா் கண்டனம்: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபா் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தாா். பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் பேசியபோது கண்டனத்தை பதிவுசெய்த அவா் பயங்கரவாதத்துக்கு எதிரான பிராந்தி... மேலும் பார்க்க