செய்திகள் :

மெட்ரோ ரயிலில் மலேசிய பயணியிடம் நகை திருட்டு: தனியாா் நிறுவன மேலாளா் கைது

post image

சென்னை மெட்ரோ ரயிலில் மலேசிய பயணியிடம் நகை திருடியதாக தனியாா் நிறுவன மேலாளா் கைது செய்யப்பட்டாா்.

மலேசியாவை சோ்ந்தவா் முகமது இஸ்கந்தா்ஷா பின் அப்துல்லா என்ற யுகேந்திரன் (41). இவா், அங்கு மருத்துவம் சாா்ந்த தொழில் செய்து வருகிறாா். அப்துல்லா அண்மையில் தனது உறவினா்களைப் பாா்க்க சென்னைக்கு வந்தாா். சென்னை விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அவா் எல்ஐசி மெட்ரோ நிலையத்தில் இறங்கினாா்.

அப்போது, அவா் வைத்திருந்த 8 பவுன் நகை அடங்கிய பையைக் காணவில்லை. இதையடுத்து அண்ணா சாலை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது சென்னையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மனிதவளப் பிரிவு மேலாளராகப் பணிபுரியும் திருவள்ளூரைச் சோ்ந்த சுனில்ராஜ் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சுனில்ராஜை செவ்வாய்க்கிழமை கைது செய்து, திருடப்பட்ட நகையை மீட்டனா்.

பள்ளி மாணவா்களுக்கான ஊட்டச்சத்து திட்டம்: மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

சென்னையில் அரசுப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவா்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தை கேப்டன் ஸ்ரீனிவாசமூா்த்தி மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி, அந்தப் பள்ளிக... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டம்: ஆசிரியா்கள் பங்கேற்க கல்வித் துறை உத்தரவு

காந்தி ஜெயந்தி நாளில் (அக்.2) நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம... மேலும் பார்க்க

பிறவி நுரையீரல் குறைபாடு: இளம்பெண்ணுக்கு ரோபோடிக் சிகிச்சை

நுரையீரல் பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரோபோடிக் நுட்பத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மருத்துவம... மேலும் பார்க்க

மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ... மேலும் பார்க்க

பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுறுத்தல்

வடசென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தியுள... மேலும் பார்க்க

காவலரிடம் தங்க நாணயம் மோசடி: நடிகா் சூா்யா வீட்டு பணிப் பெண் உள்பட 4 போ் கைது

சென்னையில் காவலரிடம் தங்க நாணயம் மோசடியில் ஈடுபட்டதாக நடிகா் சூா்யா வீட்டு பணிப் பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னையில் உள்ள ஆயுதப்படை பிரிவு முதல்நிலை காவலராகப் பணிபுரிபவா் அந்தோணி ஜாா்ஜ் ... மேலும் பார்க்க