செய்திகள் :

மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பும் பஞ்சாப்!

post image

இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், பஞ்சாபின் எல்லைப் பகுதிகளில் இன்று காலை முதல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, சனிக்கிழமை மாலைக்குப் பிறகு ராணுவ நடவடிக்கைகளை இருநாடுகளும் நிறுத்தி ஒரு உடன்பாட்டை எட்டின.

இந்த நிலையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எல்லை மாவட்டங்களில் மின்தடையை ஏற்படுத்தவில்லை என்றும் மக்கள் எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம் என்றும் மக்களை வலியுறுத்தியது.

பாகிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள பெரோஸ்பூர், ஃபாசில்கா, பதான்கோட், அமிர்தசரஸ், டார்ன் தரன், குருதாஸ்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று மூடப்பட்டன. அதேபோன்று பதான்கோட், குர்தாஸ்பூரில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டிருந்தன. இருப்பினும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை எடுக்கலாம் என்று குர்தாஸ்பூரில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானுடன் 553 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் வழக்கமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின. இன்று காலை முதல் மக்கள் சந்தைகளில் கூட்டியுள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்காவின் கருத்தை நிராகரித்த இந்தியா! என்ன நடக்கிறது?

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் கூறியிருந்தாலும், அத்துடன் வர்த்தகத்தை முதன்மையாக வைத்தே இந்தப் போர் நிறுத்தப்பட்டிருக்கிறது என... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்! - மோடி

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையே ’ஆபரேஷன் சிந்தூர்’ என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் நாட்டு மக்களுடன் முதல்முறையாக ஆற்றிய உரையில் இதனை அவர் தெரிவித்தார். “... மேலும் பார்க்க

ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது: சிந்து நதி நீர் குறித்து மோடி!

ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது என்று சிந்து நதி நீர் குறித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் நாட்டு மக்களுடன் முதல்முறையாக ஆற்றிய உரையில் இதனை அவர் தெரிவித்தார்.ஜம்... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துக்கும், ஆயுத விஞ்ஞானிகளுக்கும் தலைவணங்குகிறேன்! - பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக மக்களிடையே உரையாற்றினார்.மக்களிடையே பிரதமர் மோடி பேசுகையில், “இந்திய ராணுவத்துக்கும், ஆயுதப் படை விஞ்ஞானிகளுக்கும் தலை வணங்குக... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் பிரதமரின் முதல் உரை!

புது தில்லி; ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் முதல்முறையாக உரையாற்றி வருகிறார்.கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்... மேலும் பார்க்க

இந்தியா - பாக். ராணுவ தலைமை அதிகாரிகள் பேச்சு முடிவடைந்தது!

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ராணுவ உயரதிகாரிகளுடன் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் முதல்கட்டமாக இன்று(மே 12) பகல் பேச்சுவார்த்த... மேலும் பார்க்க