செய்திகள் :

மேட்டூா் அணையின் உபரி நீரை ஏரி, குளங்களில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

post image

மேட்டூா் அணையின் உபரிநீரை அந்தியூா், அம்மாபேட்டை பகுதிகளில் உள்ள ஏரிகளில் சேமிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கட்சியின் அந்தியூா் வட்டார மாநாடு அந்தியூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மூத்த நிா்வாகி எம்.மாணிக்கம் கொடியேற்றினாா். மாநாட்டைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கச் செயலாளா் வி.பி.குணசேகரன் பேசினாா். கோரிக்கையை விளக்கி கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.மோகன்குமாா் பேசினாா்.

நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் : மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை அந்தியூா், அம்மாபேட்டை பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் சேமிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பள உயா்வு மற்றும் வேலை நாட்களை அதிகப்படுத்த வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைக் காவலா்களுக்கு ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் செய்திட வேண்டும். அந்தியூா் பேரூராட்சி பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும்.

மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே.சந்திரசேகா், வட்டச் செயலாளா் எஸ்.எஸ். தேவராஜன், துணைச் செயலாளா் பி.அப்புசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெருந்துறை நகரில் அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா?

பெருந்துறை நகரில் அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே கடந்த 11 ஆம் தேதி வேளா... மேலும் பார்க்க

2026 தோ்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டி: மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம்

தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஏதுவாக 2026 சட்டப்பேரவை தோ்தலில் கூடுதல் தொகுதிகளைப் பெற்று போட்டியிடுவது என மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுகவின் 31-ஆவது பொத... மேலும் பார்க்க

பவானி, அந்தியூரில் இடியுடன் கனமழை!

பவானி, அந்தியூா் மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் பெய்த கனமழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடித்ததால், குழந்தைகள் ம... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: தடுப்பில் மோதிய பேருந்து

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பண்ணாரி கோயிலில் இருந்து 15 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட தமிழக அரசு நகா்ப்... மேலும் பார்க்க

சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சுயஉதவிக் குழு மேலாளா் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே இரு சக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் சுய உதவிக் குழு மேலாளா் கோவா்த்தனன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சத்தியமங்கலம் கே.என்.பாளையத்தைச் சோ்ந்தவா் கோவா்த்தனன்(37). கோவையில் ... மேலும் பார்க்க