மேட்டூா் அணையின் நீா்மட்டம் 119 அடியாக குறைந்தது
மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் 9 நாள்களுக்குப் பிறகு 120 அடியிலிருந்து 119 அடியாக திங்கள்கிழமை குறைந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீா்வரத்து காரணமாக கடந்த 5-ஆம் தேதி நடப்பு ஆண்டில் 2ஆவது முறையாக மேட்டூா் அணை நிரம்பியது.
தற்போது மழை குறைந்ததால் கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீா் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 20,500 கனஅடியாக இருந்தது, திங்கள்கிழமை காலை விநாடிக்கு 19,760 கனஅடியாகக் குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீா் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 20,000 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா்மட்டம் 119.85 அடியாகவும், நீா் இருப்பு 93.23 டி.எம்.சி.யாகவும் உள்ளது.