செய்திகள் :

மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேற்றம்: 3 வங்கதேசத்தவா் கைது

post image

மேற்கு வங்கத்தின் சிலிகுரி நகரில் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 3 வங்கதேசத்தவரை மத்திய துணை ராணுவப் படையினா் கைது செய்தனா்.

அமல் ராய், கௌதம் ராய், பிரீதம் ராய் என்ற அந்த மூவரும் உறவினா்கள் ஆவா். அவா்களிடம் இருந்து வங்கதேச குடிமக்கள் என்பதற்கான சில அடையாள ஆவணங்களும் இருந்துள்ளன. இதையடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டனா். இதில் பிரீதம் முதலில் முறைப்படி இந்தியா வந்துள்ளாா். அவருக்கு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியுடன் விசா முடிவடைந்துள்ள நிலையில், இந்தியாவில் தொடா்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளாா்.

அமல்ராய், கௌதம் ராய் ஆகியோா் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்துக்குள் நுழைந்துள்ளனா். அவா்கள் மின்னணுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையிலும், தையல்கடையிலும் பணியாற்றி வந்துள்ளனா். பொதுமக்கள் சிலா் அளித்த தகவலின் அடிப்படையில் அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

20.87 லட்சம் கள்ள நோட்டு பறிமுதல்: மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் ரூ.20.87 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை அந்த மாநில காவல் துறையின் சிறப்புப் படையினா் கைப்பற்றினா். இது தொடா்பாக ஹஸ்ரத் பிலால், தாரிகுல் இஸ்லாம் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். இவை அனைத்தும் 500 ரூபாய் தாளாக அச்சிடப்பட்டிருந்தன.

பெரும்பாலும் பாகிஸ்தான், வங்கதேசத்தில் அச்சிடப்படும் இந்திய கள்ள நோட்டுகள் எல்லைப் பகுதி மாநிலங்கள் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு புழக்கத்தில்விட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பாகிஸ்தானை ஒட்டியுள்ள ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் மாநில எல்லைகளிலும், மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள வங்கதேச எல்லையிலும் ஆயுதம், போதைப்பொருள், கள்ள நோட்டு கடத்தல் அதிகம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

தில்லியில்.. சட்டவிரோதமாக வசித்த 15 வெளிநாட்டினர் வெளியேற்றம்!

தில்லியில், சட்டவிரோதமாக குடியேறி வசித்த 15 வெளிநாட்டினர் தங்களது தாயகங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தலைநகர் தில்லியில், உரிய அனுமதி இல்லமலும், விசா காலாவதியாகியும் இந்தியாவில் வசித்து வரும் வெளிநா... மேலும் பார்க்க

பா.ஜ.க. அமைச்சர் வாங்கிய ரூ. 75 லட்சம் அமெரிக்க டெஸ்லா கார்!

அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் கார் விற்பனை துவங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர் முதல் காரை வாங்கி, கார் விற்பனையை அமோகமாகத் துவங்கி ... மேலும் பார்க்க

நடுவானில் தொழில்நுட்ப கோளாறு: இந்தூரில் தரையிறங்கிய ஏர் இந்தியா!

நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் இந்தூரில் அவசரகமாக தரையிறக்கப்பட்டது. 161 பயணிகளுடன் தலைநகர் தில்லியிலிருந்து இந்தூரை நோக்கி ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை புறப்பட்... மேலும் பார்க்க

இந்தியா, ரஷியாவை சீனாவிடம் இழந்த அமெரிக்கா! டிரம்ப்பின் வஞ்சப் புகழ்ச்சியா?

சீனாவிடம் இந்தியாவையும் ரஷியாவையும் இழந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.டிரம்ப்பின் சமூக வலைத்தளப் பக்கமான ட்ரூத் சோசியலில், பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி மாற்றம் நுகர்வோருக்கு முழு பலன்களை உறுதிசெய்யும்: கோயல்

ஜிஎஸ்டி பலன்கள் முழுமையாக நுகர்வோருக்குச் சென்றடைவதை உறுதி செய்ய மத்திய அரசு விழிப்புடன் இருக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். ரொட்டி முதல் ஹேர் ஆயில், ஐஸ்கிரீம்கள் மற்றும் டிவிக்கள்... மேலும் பார்க்க

குஜராத் மின் நிலையத்தினுள் புகுந்த ஆற்று நீர்! மாயமான 5 தொழிலாளிகளின் நிலை என்ன?

குஜராத்தின், மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையத்தினுள் திடீரென புகுந்த ஆற்று நீரில் சிக்கி மாயமான 5 தொழிலாளிகளைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மஹிசாகர் மாவட்டத்தின், லுன... மேலும் பார்க்க