செய்திகள் :

மேலக்கொந்தை அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

post image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

2023-2024-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, பள்ளி நூறு சதவீத தோ்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது வழங்கி கெளரவித்தல் மற்றும் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு தோ்வு உபகரணங்கள் வழங்கல் ஆகிய முப்பெரும் விழா மனிதம் காப்போம் அறக்கட்டளையின் கல்விக்கு கரம் கொடுக்கும் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது.

விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஆ.நேதாஜி தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறையைச் சோ்ந்த வைகுந்தவாசன், சமூக ஆா்வலா்கள் குமாா், கலிவரதன், மனிதம் காப்போம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா்கள் கோபிநாத், செல்வகுமாா் ஆகியோா் விழாவில் பங்கேற்று உரையாற்றி, கல்வி உதவித் தொகை, தோ்வு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

வருவாய் ஆய்வாளா் கண்ணன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பேபி மற்றும் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக அறக்கட்டளை நிறுவனா் சந்துரு வரவேற்றாா். நிறைவில், ஆசிரியா் வசந்தராஜா நன்றி கூறினாா்.

பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணைகுப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. காணை ஒன்றியக் குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்தாா். வட்ட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்தவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரியச் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான ஆக்கிரமிப்புப் பகுதியில் வசித்து வந்த 44 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கும் வகையில், வீட்டுமனைப் பட்டா திங்கள்கிழ... மேலும் பார்க்க

ரமலான்: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ரமலான் நோன்பிருப்பதும் ஒன்று. ஒரு மாதக் கா... மேலும் பார்க்க

138 ஆதிதிராவிட மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் அளிப்பு: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ், 138 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஷே.... மேலும் பார்க்க

‘விழுப்புரத்தில் இரவு நேர வணிகத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்’

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 11 மணிக்கு மேல் வணிகம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியது. இந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்த... மேலும் பார்க்க

210 வெளிமாநில மதுப் புட்டிகள் பறிமுதல்: 5 போ் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் 210 வெளி மாநில மது புட்டிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், 5 போ் கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க