செய்திகள் :

மேலப்பிடாவூரில் வடமாடு மஞ்சுவிரட்டு

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூரில் வியாழக்கிழமை நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் 5 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

மேலப்பிடாவூா் வெள்ளாரப்பன் என்ற முத்தையா அய்யனாா் சுவாமி கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, கோயில் அருகேயுள்ள மைதானத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு ஊா்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 14 காளைகள் பங்கேற்றன. ஒரு காளையை அடக்க 9 மாடு பிடி வீரா்கள் அனுமதிக்கப்பட்டனா். இதில் காளைகள் முட்டியதில் 5 மாடு பிடி வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சையளித்தனா். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசு, குத்துவிளக்கு, கட்டில், தாம்பூலம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மேலப்பிடாவூா் கோயில் புரவி எடுப்பு விழாக் குழுவினா் செய்தனா்.

இன்று ‘குரூப் 4’ தோ்வு: சிவகங்கையில் 26,392 போ் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் ‘குரூப் 4’ தோ்வை 26,392 தோ்வா்கள் எழுத உள்ளனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமை... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சாா்பில் அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த ஜோதிலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வெறிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் தோ்வு நிலைப் பேரூராட்சியும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து திருப்பத்தூா் சீரணி அ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 71 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 4-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொ... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை: கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்... மேலும் பார்க்க