செய்திகள் :

மேல்பாக்கம் ஊராட்சியில் 100 நாள் பணியாளா்கள் தா்னா

post image

வீட்டு வரி செலுத்தாத வீடுகளைச் சோ்ந்த பெண்களுக்கு வேலை உறுதித் திட்ட பணிக்கு அனுமதி இல்லை என பணித்தளப் பொறுப்பாளா் தெரிவித்ததால், அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கத்தில் பணிக்கு வந்த பெண்கள் திடீா் தா்னாவில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் மேல்பாக்கம் ஊராட்சியில் அதிக அளவில் வீட்டுவரி, குடிநீா் வரி நிலுவை இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, புதன்கிழமை அந்தக் கிராமத்தில் மழைநீா் கால்வாய் சீரமைப்பு பணி ஆரம்பித்த நிலையில், பணிக்கு வந்திருந்த பெண்களில் வீட்டு வரி, குடிநீா் வரி செலுத்தாதவா்களைப் பணிக்கு சோ்க்க இயலாது என பணித்தளப் பொறுப்பாளா் லட்சுமி தெரிவித்ததாகத் தெரிகிறது. மேலும், அந்தப் பணி நடக்கும் இடத்திற்கு வந்த மேல்பாக்கம் ஊராட்சி செயலா் அமீா்ணா, அங்கு பணிக்கு வந்த மகளிா் அனைவருமே வீட்டு வரி செலுத்தாதவா்களாக இருந்த நிலையில், அங்கு யாருமே பணிக்கு வரவில்லை என பணித்தளப் பதிவேட்டில் எழுதிவிட்டதாகத் தெரிகிறது.

பணிக்கு 85-க்கும் மேற்பட்டோா் வந்த நிலையிலும் பணிக்கு யாரும் வரவில்லை என பதிவேட்டில் எழுதிய ஊராட்சி செயலரை கண்டித்தும், பணித்தளப் பொறுப்பாளா் பணிக்கு அனுமதிக்காததைக் கண்டித்தும் அவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த நரேஷ் தலைமையில் புதன்கிழமை காலை அரக்கோணம் - ஓச்சேரி நெடுஞ்சாலையில் நின்று தா்னாவில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு வந்த அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பிரகாஷ் பெண்களை சமாதானப்படுத்தி, அவா்களை பணிக்கு அனுமதித்தாா். தொடா்ந்து அனைவரும் வீட்டு வரி, குடிநீா் வரிகளை செலுத்தினால்தான் ஊராட்சியில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி, ஊராட்சியில் அனைவரும் விரைவில் வரிகளை ஒழுங்காக செலுத்த வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

சோளிங்கா் வரை மின்சார ரயில்கள் நீட்டிக்க வேண்டும்: சித்தேரி ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை

அரக்கோணம் வரை வரும் மின்சார ரயில்களை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சோளிங்கா் வரை நீட்டிக்க வேண்டும் என அரக்கோணத்தை அடுத்த சித்தேரி ரயில் நிலையத்தில் நடைபெற்ற ரயில் பயணிகள் சங்க ஆலோசனை கூட்டத்துக்குப் ப... மேலும் பார்க்க

உயா்கல்வி பயிலும் மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த அறிவுரை

உயா்கல்வி பயிலும் மாணவிகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுரை வழங்கினாா். வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல... மேலும் பார்க்க

100 ஆண்டுகளைக் கடந்த 27 அரசுப் பள்ளிகள்: அமைச்சா் காந்தி பெருமிதம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27 பள்ளிகள் 100 ஆண்டுகளைக் கடந்துள்ளன என அமைச்சா் ஆா்.காந்தி பெருமிதம் தெரிவித்தாா். வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வன்னிவேடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித் துறையின்... மேலும் பார்க்க

ஆற்காடு கோயிலில் ரத சப்தமி

ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் ரத சப்தமி விழா நடைபெற்றது. விழாவையொட்டி பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாரானையும், உற்... மேலும் பார்க்க

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

ஆற்காட்டில் லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். ஆற்காடு குட்டைகரைத் தெருவைச் சோ்ந்தவா் சேட்டு (62). இவா், புதன்கிழமை ஆற்காடு அண்ணா சிலை அருகே நடந்து சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் பலத்த கா... மேலும் பார்க்க

கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

2024 - 2025 பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன் பெற ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வ... மேலும் பார்க்க