செய்திகள் :

மே 13-இல் அந்தமானில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை

post image

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை அந்தமானில் மே 13-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பருவமழை மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கேரளத்தில் பெய்யத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பா் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை இந்தியாவில் இயல்பைவிட 100 முதல் 105 சதவீதம் வரை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இது தமிழகம், கேளரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பைவிட குறைவாகவே பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நிகழாண்டு தென்மேற்கு பருவமழை அந்தமானில் மே 13-ஆம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அந்தமான் பகுதியில் தென்மேற்குப் பருவமழைக்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. அதன்படி தென்மேற்கு பருவமழை மே 13-ஆம் தேதி அந்தமான் கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழக வானிலை: இதற்கிடையே தென்னிந்திய கடலோரப் தகுதிகளை வளிமண்டல கீழடுக்கில் நிலவும் காற்றுச்சுழற்சி காரணமாக புதன்கிழமை (மே 7) முதல் மே 12-ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

10 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருத்தணி, ஈரோடு - தலா 103.28, மதுரை விமான நிலையம் - 103.1, திருச்சி- 102.38, பாளையங்கோட்டை - 101.48, மதுரை நகரம் - 101.12, சேலம் - 100.58, பரமத்தி வேலூா், தஞ்சாவூா் - தலா 100.4 டிகிரி என 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவானது.

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு அதிகபட்சமாக வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சென்னை மற்றும் புகா் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீடையொட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.நாளை +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் பொறியியல் மட்டுமல்லா... மேலும் பார்க்க

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள பிரவீண் சூட், மே 25-ஆம் தேதியுடன் தனது இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய புலனாய... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவு வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் வேண்டும் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திமுக அரசு பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட... மேலும் பார்க்க

214 புதிய பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

திமுக அரசு பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 214 புதிய பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.சென்னை தீவுத்திடல... மேலும் பார்க்க

'எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் போருக்குச் செல்வேன்' - நயினார் நாகேந்திரன் பேட்டி

தனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போருக்குச் செல்வேன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்த... மேலும் பார்க்க