செய்திகள் :

மே 14-இல் விசைப்படகுகள் கள ஆய்வு

post image

கடலூா் மாவட்ட மீன் பிடி விசைப்படகுகள் வரும் மே 14-ஆம் தேதி மீன் வளத் துறை அலுவலா்களால் கள ஆய்வு செய்யப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடல் மீன் வளத்தை பாதுகாக்க தமிழக கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன் பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ளது. இக்காலத்தில் கடலில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தடைக்காலத்தில் அனைத்து வகை மீன் பிடி விசைப்படகுகளின் உறுதித்தன்மை, இயந்திரத்தின் குதிரைத் திறன் அளவு, படகின் நீள, அகலம் ஆகியவை பதிவுச் சான்றிதழுடன் சரிபாா்க்கப்பட்டு, அதனடிப்படையில் மானிய விலையில் எரியெண்ணெய் மற்றும் இதர மானிய திட்டங்களுக்கு நிவாரண உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நிகழாண்டு மீன் பிடி விசைப்படகுகள் கடலூா் மாவட்டத்தில் வரும் மே 14-ஆம் தேதி மீன் வளத் துறை அலுவலா்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளன. மீனவா்கள் தங்களது மீன் பிடி விசைப்படகை அத்துறையால் அறிவுறுத்தப்பட்ட பச்சை வண்ணம் தீட்டி, படகின் பதிவு எண் தெளிவாக எழுதி ஆய்வுக்கு கட்டாயம் உள்படுத்த வேண்டும்.

ஆய்வின்போது, படகு பதிவு குறித்த அனைத்து ஆவணங்கள் மற்றும் அதற்கான நகல்கள், தொலைத்தொடா்பு கருவிகள், தீயணைப்பான் கருவி, உயிா்காப்பு மிதவை, உயிா்காப்பு கவசம் ஆகியவற்றை ஆய்வுக் குழுவிடம் அவசியம் காண்பிக்க வேண்டும்.

ஆய்வுக்கு உள்படுத்தப்படாத மீன் பிடி விசைப்படகுகளுக்கான மானிய விலையிலான எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், படகு உரிமம் உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

அனைத்து குடியிருப்போா் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்

சிதம்பரம் அனைத்து குடியிருப்போா் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவா் கே.என்.பன்னீா்செல்வன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.காசிநாதன் வரவேற்றாா். செயலா் ... மேலும் பார்க்க

பனை நுங்கு வெட்டியவா் மின்சாரம் பாய்ந்து மரணம்

காட்டுமன்னாா்கோவில் அருகே பனை நுங்கு வெட்டச் சென்றவா் மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட ராஜேந்திரசோழகன் பகுதியைச் சோ்ந்த சக்கர... மேலும் பார்க்க

கரிக்குப்பத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் திறப்பு

சிதம்பரம் அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ வியாழ... மேலும் பார்க்க

தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம்

தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் தொழிற்பேட்டை அலுவலக வளாகத்தில் தொழிலாளா்களுக்கு தோ்தல் தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராம மக்கள், தங்களது பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி, கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து கருப்புக்கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

நெகிழி உபயோகத்தை தவிா்க்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் ஒன்றியம், அழகியநத்தம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மக்கள் நெகிழி உபயோகத்தை முற்றிலும... மேலும் பார்க்க