செய்திகள் :

மே 26ல் குஜராஜ் செல்கிறார் பிரதமர் மோடி: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்!

post image

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மே 26, 27ல் குஜராத் மாநிலத்துக்குச் செல்லவுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி..

பிரதமர் மோடி குஜராத்துக்கு வருகிற 26,27 ஆகிய இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். காந்தி நகரின் மகாத்மா மந்திரில் நடைபெறும் நகர்ப்புற மேம்பாட்டு ஆண்டுக்கான அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் வருகை மாநில மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை வரவேற்க மக்கள் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் வருகையைத் தொடர்ந்து மாநிலத்தில் ரூ.82,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்.

பூஜ் நகரில் ரூ. 53,414 கோடி மதிப்பிலான 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். மேலும் குஜராத் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் பயணடையும் வகையில், ஆஷாபுரா ஆன்மிக மையத்தில் வளர்ச்சி பணிகளையும் தொடங்கிவைக்க உள்ளார்.

கட் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆன்மிக மையத்தின் வளாகம் ரூ.32.71 கோடி மதிப்பில் புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை மாநில அரசு மற்றும் குஜராத் பவித்ர யாத்ராதம் விகாஸ் வாரியம் இணைந்து மேற்கொண்டது. இது தற்போது நிறைவடைந்துள்ளது. ஆஷாபுரா மாதா கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கான மேம்பட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளம்: கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்! பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது.கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க

அசாமில் பாக். ஆதரவாளர்களின் கைதுகள் 76 ஆக உயர்வு!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கைது செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடி... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் வைப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

பிகாரில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள்.பிகார் மாநிலம், பக்சர் மாவட்டத்தில் உள்ள அஹியாபூர் கிராமத்தில் மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை சாலைய... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் ராகுல் நேரடி ஒத்துழைப்பு! பாஜக கண்டனம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பூஞ்ச் பகுதியைப் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை ஒரு சோகமான நிகழ்வு என்று குறிப்பிட... மேலும் பார்க்க