செய்திகள் :

மே 6 வரை இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தம்: ஏர் இந்தியா

post image

இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தில்லியிலிருந்து அங்குச் செல்லவிருந்த விமானத்தை அபுதாபிக்கு ஏர் இந்தியா நிறுவனம் திருப்பிவிட்டது.

இங்கிருந்து புறப்பட்ட பிறகு தாக்குதல் நடத்தப்பட்டதால், ஜோர்டான் வான்வெளிப்பரப்பில் விமானம் சென்றுக்கொண்டிருக்கும்போது அபுதாபிக்கு திருப்பிவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மே 6ஆம் தேதி வரை டெல் அவிவ் நகரத்துக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா மட்டுமின்றி ஜெர்மனியைச் சேர்ந்த லுஃப்தான்சா, அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ், சுவிட்சர்லாந்தின் சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக சைப்ரஸ் நாட்டுக்குச் சொந்தமான டியூஎஸ் ஏர்வேஸ் விமான நிறுவனங்களும் டெல் அவிவ் நகரத்துக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரிலுள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து யேமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் விமான நிலையத்திற்குச் சொந்தமான இடங்கள் சேதமடைந்தன.

குறிப்பாக விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தின் அருகேவுள்ள சாலைகள், ஏவுகணைத் தாக்குதலால் பள்ளமாகின.

இதனால், அந்த விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. விமான நிலையத்தின் அனைத்து வாயில்களும் சிறிது நேரத்துக்கு மூடப்பட்டு, விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

தாக்குதல் நடந்தபோது தில்லியில் இருந்து டெல் அவிவ் நகருப்பு புறப்பட்ட விமானம் ஜோர்டான் வான்வெளிப் பரப்பில் இருந்தபோது அபுதாபிக்கு திருப்பிவிடப்பட்டது.

இதையும் படிக்க | இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி தாக்குதல்!

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் குழுத் தலைவா் ஜான் பிரிட்டாஸ்!

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ஜான் பிரிட்டாஸை அக்கட்சி நியமித்துள்ளது. இது தொடா்பாக கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை... மேலும் பார்க்க

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்: அமித் ஷா

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்; இம்மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். தில்லியில்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் மத தீவிரவாதம்! மத்திய உள்துறையிடம் ஆளுநா் அறிக்கை!

‘மேற்கு வங்க மாநிலத்தில் மத அடிப்படையிலான பிரிவினைத் தீவிரவாதம் அச்சமூட்டும் சவாலாக உருவெடுத்துள்ளது’ என்று முா்ஷிதாபாத் வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமா்ப்பித்த அறிக்கையில் மாநில ஆ... மேலும் பார்க்க

கடும் பாதுகாப்புடன் நீட் தோ்வு: 5,400 மையங்களில் நடைபெற்றது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்), நாடு முழுவதும் 5,400-க்கும் மேற்பட்ட மையங்களில் கடும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22.7 லட்சத... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்! நாட்டில் முதல்முறை..!

நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினாா். இதன்மூலம் நெல் விளைச்சல் 30 சதவீதம் வ... மேலும் பார்க்க

பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் 15 டன் மலா்கள... மேலும் பார்க்க