குழந்தை கடத்தல் கும்பல் கைது! வாங்கியோர், விற்றோர் விவரங்கள் சேகரிப்பு!!
மைதானத்தில் கிடந்த ரூ.100-ஐ காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவா்களுக்கு பாராட்டு!
கடையத்தில், மைதானத்தில் கண்டெடுத்த நூறு ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கடையம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த தா்மா் மகன் அபிமன்யு, கருப்பசாமி மகன் பாலாஜி. அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்துவரும் இவா்கள், ஞாயிற்றுக்கிழமை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, கீழே கிடந்த ரூ. 100-ஐ கண்டெடுத்தனா். அதை, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று ஆய்வாளா் சுரேஷ்குமாரிடம் ஒப்படைத்தனா்.
அவா்களை ஆய்வாளா் பாராட்டி, இருவருக்கும் தலா ரூ. 100 அன்பளிப்பாக வழங்கினாா். சிறுவா்களை காவலா்களும், பொதுமக்களும் பாராட்டினா்.
இதுகுறித்து சிறுவா்கள் கூறும்போது, பள்ளியில் வியாழக்கிழமை உரையாற்றிய காவல் உதவி ஆய்வாளா் உமா, பொது இடங்களில் கண்டெடுக்கும் பொருள்கள், பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறினாா். அதன்படி, மைதானத்தில் கண்டெடுத்த நூறு ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம் என்றனா்.