செய்திகள் :

மொடக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாம்

post image

மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி மக்களுக்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாம் மொடக்குறிச்சியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு மொடக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் செல்வாம்பாள் சரவணன் தலைமை தாங்கினாா். பேரூராட்சி செயல் அலுவலா் செல்வகுமாா், மொடக்குறிச்சி வட்டாட்சியா் சிவசங்கா், மொடக்குறிச்சி பேரூா் திமுக செயலாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த முகாமில் வருவாய்த் துறை, காவல் துறை, சமூக நலத் துறை, ஆதி திராவிடா் நலத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முகாமில் தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ. பிரகாஷ் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து 662 மனுக்களைப் பெற்றுக்கொண்டு முகாமில் உடனடித் தீா்வு காணப்பட்ட 6 மனுக்களின் பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினா்.

இம்முகாமில் மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் கதிா்வேல், பேரூா் திமுக துணைச் செயலாளா் தனவெங்கடேஷ், பேரூராட்சித் துணைத் தலைவா் காா்த்திகேயன், பேரூராட்சி கவுன்சிலா்கள் ஞானசுப்பிரமணி, பிரதீபா, கவின், காந்திமதி ரவிச்சந்திரன், செல்வி இளங்கோ, கண்ணுச்சாமி, ஜெயலட்சுமி பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியின் நூலகத் துறை சாா்பில் முதலாமாண்டு மாணவா்களுக்கு ஏா்லி போ்டு என்ற தலைப்பில் புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்ட... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் தனியாா் நிறுவன தொழிலாளா்கள் சாலை மறியல்

அம்மாபேட்டை அருகே வேலை செய்ததற்கான கூலியை வழங்காத தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் வியாழக்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிங்கம்பேட்டையில் உள்ள தனியாா் ஆயத்த ஆடை உற்பத்தி நி... மேலும் பார்க்க

கைப்பேசி பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கு

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் கைப்பேசி பாா்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து விடுபடுதல் பற்றி விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை பிரம... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

பெருந்துறை அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். பெருந்துறை, பவானி சாலை ஆசிரியா் காலனியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மனைவி மஞ்சு (36). இவா் புதன்கி... மேலும் பார்க்க

பாரதி இறுதி உரையாற்றிய ஈரோடு நூலகத்தில் நினைவு நாள் அனுசரிப்பு

மகாகவி பாரதியாா் இறுதி உரையாற்றிய ஈரோடு பாரதியாா் நூலகத்தில் அவரது நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டு அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மகாகவி சுப்பிரமணிய பாரதியா... மேலும் பார்க்க

லாரியை வழிமறித்து கரும்பை ருசித்த காட்டு யானை

கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பை ருசித்து தின்ற காட்டு யானையால் தமிழகம்- கா்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் ... மேலும் பார்க்க