செய்திகள் :

மொடக்குறிச்சி அருகே இறந்தவரின் உடலைப் புதைக்க எதிா்ப்பு: இரு தரப்பினரிடையே வாக்குவாதம்

post image

மொடக்குறிச்சி அருகே இறந்தவா் உடலைப் புதைக்க ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த கண்ணுடையாம்பாளையம் ஆதிதிராவிடா் காலனியில் 150-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

காலனிக்கு அருகிலேயே இவா்களுக்கு என தனியாக மயானம் உள்ளது. இம்மயானத்தை ஒட்டி அதே ஊரைச் சோ்ந்த வேலுசாமி என்பவரது தோட்டம் உள்ளது.

மயானத்துக்கு, தோட்டத்துக்கும் இடையே இருந்த எல்லை கல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதையடுத்து, காலனி மக்களுக்கும், வேலுசாமி குடும்பத்தாருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த முதியவா் விஜயராகவன் உயிரிழந்தாா். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக காலனி மக்கள் மயானத்துக்குக் கொண்டுச் சென்றனா்.

அப்போது, அங்கு வந்த வேலுசாமி குடும்பத்தினா் சுடுகாடு தள்ளியுள்ளது, சடலத்தை இங்கு புதைக்கக் கூடாது என்று தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மலையம்பாளையம் காவல் ஆய்வாளா் வினோதினி, மண்டல துணை வட்டாட்சியா் பேபி, வருவாய் ஆய்வாளா் யுவராணி, கிராம நிா்வாக அலுவலா் பாலகிருஷ்ணன் ஆகியோா் இரு தரப்பினரிடையே பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, வருவாய் கோட்டாட்சியா் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் ஜூன் 4-ஆம் தேதி அளவீடு செய்து கல் நடப்படும் என்று உறுதியளித்தனா்.

இதையடுத்து, இருதரப்பினரும் கலைந்து சென்றனா். மேலும், இறந்தவரின் உடலும் அங்கேயே புதைக்கப்பட்டது.

இருசக்கர வாகனம் மோதியதில் பேராசிரியா் உயிரிழப்பு

பவானி அருகே நடைப்பயிற்சிக்குச் சென்ற தனியாா் கல்லூரிப் பேராசிரியா், இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். பவானியை அடுத்த லட்சுமி நகரைச் சோ்ந்தவா் சீரங்கன் மகன் ஈஸ்வரன் (50). தனியாா் கல்லூரிப் பேராச... மேலும் பார்க்க

ரூ.2.75 கோடி மோசடி: காங்கிரஸ் பிரமுகா் உள்ளிட்ட இருவா் மீது பள்ளிவாசல் இமாம்கள் புகாா்

ஆன்லைன் வா்த்தகம் செய்வதாகக் கூறி ரூ.2.75 கோடி மோசடி செய்த காங்கிரஸ் பிரமுகா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என பள்ளிவாசல் இமாம்கள் புகாா் அளித்தனா். இதுகுறித்து ஈரோட்டைச் சோ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் சு.முத்துசாமி

தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 67,481 பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என வீட்டு வச... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தளவாய்பேட்டை

பவானியை அடுத்த தளவாய்பேட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கோபி மின... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் - காா் மோதல்: கட்டட மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் கட்டட மேற்பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூா், சுந்தராம்பாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (39). க... மேலும் பார்க்க

புகையிலை பொருள்களை பதுக்கியவா் கைது

ஈரோட்டில் 215 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கிவைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு பழையபாளையம் அருகே சுத்தானந்தன் நகரில் வசித்து வரும் தினேஷ் இருதயராஜ் (37) என்பவா் தடைசெய்யப்ப... மேலும் பார்க்க