செய்திகள் :

'மோடியும், அமித் ஷாவும் தமிழகத்துக்கு வர வர... திமுக வாக்குகள் அதிகரிக்கும்' - ஆ.ராசா சொல்வது என்ன?

post image

திமுக துணைப் பொதுசெயலாளரும், எம்.பி-யுமான ஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய விஷயங்கள் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆ.ராசா
ஆ.ராசா

டெல்லி, மகாராஷ்டிராவை போல் தமிழகத்திலும் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அமித் ஷாவின் பேச்சு குறித்து பேசிய ஆர்.ராசா, “அமித் ஷாவின் பேச்சு அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், பிளவுபடுத்தும் சூது. 

அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அருவருக்கத்தக்க வகையில் அமித்ஷா பேசி இருக்கிறது.

அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல

அமித் ஷாவின் பேச்சு அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அமித் ஷாவின் பேச்சை தமிழக மக்கள் ஒருபோதும் விரும்பவோ, ஏற்கவோ மாட்டார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள நற்பெயரால் அச்சமடைந்து தான் அமித் ஷா தமிழகம் வந்திருக்கிறார். பாஜகவின் எந்தவித மத அரசியலும், பிளவுவாத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை.

ஆ.ராசா
ஆ.ராசா

திமுக ஆட்சிக்கு அச்சப்பட்டு தான் தமிழகத்திற்கு வந்து அமித்ஷா அவ்வாறு பேசி இருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். மோடியும், அமித் ஷாவும் தமிழகத்திற்கு வருவது அதிகரிக்க அதிகரிக்க திமுகவுக்கான வாக்குகள் அதிகரிக்கும்.

திராவிட இயக்க சித்தாந்தம் உள்ளவரை இங்கு பாஜகவால் வெற்றி பெற முடியாது"என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ராமதாஸ்–அன்புமணி இணைவதற்குச் சிறப்பு யாகம்; "மிகப்பெரிய மாற்றத்தைத் தரும்" - மா.செ., ஸ்டாலின்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவரான அன்புமணி ஆகியோருக்கு இடையேயான மோதல் பா.ம.க வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.தந்தை, மகன் இடையே ஏற்பட்ட வெளிப்படையான உரசல் பா.ம.க முதற்கட்ட நிர்வாகிகள்... மேலும் பார்க்க

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் திருமண மண்டபம் - அரசாணைக்கு உயர் நீதிமன்ற கிளை தடை

பழநி தண்டாயுதபாணி கோயில் நிதியை எடுத்து, திருமண மண்டபம் கட்டுவதற்கு அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்த இந்து தமிழர் கட்... மேலும் பார்க்க

`விஜய் வீட்டில் ஐ.டி ரெய்டு.. நான் சம்பந்தப்பட்டிருந்தேனா?’ - தவெகவில் இணைந்த முன்னாள் IRS அருண்ராஜ்

விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ் இன்று விஜய்யின் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.அருண் ராஜ் - TVK தவெகவில் இணைந்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ''இது எனக்கு ரொம்பவே சந்தோஷ... மேலும் பார்க்க

TVK : 'முன்னாள் MLA-க்கள்; விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி! - தவெகவில் இணைந்தோர் யார் யார்?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று திமுக, அதிமுக சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலரும் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவரும் விஜய்யின் முன்னிலையில் இணைந்திருக்கின்றனர்.TVK Vijayஇந்த இணைப்பு விழா... மேலும் பார்க்க

TVK : 'விஜய் கட்சியில் இணையும் முக்கியப் புள்ளிகள்?' - பனையூர் அப்டேட்

சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி கே.ஏ.அருண்ராஜ் விஜய்யை சந்தித்து தவெகவில் இணையவிருப்பதாக கூறுகிறார்கள். அருண் ராஜ் சேலத்தை சேர்ந்தவர். மருத்துவம் பயின்றவர். கிருஷ்ணகிரியில் 5 ஆண்டுகள்... மேலும் பார்க்க

பா.ஜ.க-வினர் முருகனை ஒப்புக்குத் தூக்கிப் பிடிக்கிறார்கள்; நான் உளமாற தூக்கிப் பிடிக்கிறேன்- சீமான்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி கிராமத்தில் எஸ்.எஸ்.எல்.எஃப் ரியல் எஸ்டேட் உரிமையாளர் தொழிலதிபர் சக்திவேல் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நாம் தமிழர்... மேலும் பார்க்க