செய்திகள் :

மோடியும் ஷி ஜின்பிங்கும் மோசமான நடிகர்கள்..! அமெரிக்க நிதியமைச்சர் கடும் தாக்கு!

post image

பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் மோசமான நடிகர்கள் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு ரஷிய அதிபர் புதினும் பிரதமர் மோடியும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில், இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இந்தியா அமெரிக்காவுக்கு அதிகப் பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனால், அமெரிக்கா இந்தியாவுக்கு மிகக் குறைந்த அளவிலேயே ஏற்றுமதி செய்கிறது. இந்த ஒருதலைப்பட்ச வா்த்தக உறவு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்கா மீதான வரிகளைக் குறைக்க இந்தியா முன்வந்துள்ளதாகவும், இதனால், தில்லி - வாஷிங்டன் இடையிலான நெருக்கடியைத் தவிர்க்க முடியும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் பேசுகையில், “இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இது உக்ரைன் - ரஷியா இடையேயான போரை மேலும் தூண்டுகிறது.

சமீபத்தில் ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மூவரும் சந்தித்து பேசினர். இந்தக் கூட்டம் நீண்டகால கூட்டம் என நினைக்கிறேன். இது செயல்மிக்க கூட்டம் என்றும் நினைக்கிறேன்.

இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடு. அவர்களின் மதிப்புகள் ரஷியாவைவிட நமக்கும் சீனாவுக்கும் மிக தேவயானவை. மேலும், இவர்கள் மிகவும் மோசமான நடிகர்கள். இந்தியாவும், சீனாவும் ரஷியாவின் போர் எந்திரத்துக்கு எரிபொருள் ஊற்றி வருகின்றன.

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு வலுவான அடித்தளத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இரண்டு பெரிய நாடுகள் இதற்கு விரைவில் தீர்வு காணும்” எனத் தெரிவித்தார்.

India a bad actor: Trump aide fumes over oil buys, calls SCO meet 'performative'

இதையும் படிக்க : தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

வெள்ள நீரை மக்கள் சேமிக்கலாமே.. யோசனை சொல்லும் பாகிஸ்தான் அமைச்சர்!

பாகிஸ்தானின் வடக்கு மாகாணங்கள், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், மழை வெள்ளம் என்பது கடவுளின் வரம் என்று கூறியிருப்பது பேசுபொருளாகியி... மேலும் பார்க்க

புர்கினா பஸோவில் தன்பாலின ஈர்ப்புக்குத் தடை!

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பஸோவில், தன்பாலின சேர்க்கைக்குத் தடை விதிக்கும் புதிய சட்டமானது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புர்கினா பஸோ நாட்டில், கேப்டன் இப்ராஹிம் தரோரே தலைமை... மேலும் பார்க்க

ஆப்கன் நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 1,400ஐ தாண்டியது!

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ தாண்டியுள்ளதாக தலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்... மேலும் பார்க்க

மூன்று பாக்கெட் வேகாத நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவன் பலி!

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில், சமைக்கப்படாத மூன்று பாக்கெட் நூடுல்ஸை சாப்பிட்ட 13 வயது சிறுவர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சமைக்கப்படாத நூடுல்ஸை சாப்பிட்ட சிறுவனுக்கு சற்று நே... மேலும் பார்க்க

காஸாவில் தொடரும் தாக்குதல்! பட்டினிச் சாவு 361 ஆக உயர்ந்தது!

காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உள்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை நெருங்கிக் கொ... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் பெல்ஜியம்! இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடை!

பெல்ஜியம் அரசு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் போரில், தற்போது வரை 60,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ர... மேலும் பார்க்க