செய்திகள் :

மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளது! - கார்கே

post image

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டைத் தவறாக வழிநடத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ள்ளார்.

பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருந்த நிலையில், பாகிஸ்தானின் கருத்தை இந்திய ராணுவம் தொடர்ந்து மறுத்து வந்தது.

ஆனால், இன்றைய நேர்காணலில், இந்தியா - பாகிஸ்தான் சண்டையின்போது, பாகிஸ்தான், இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியிருக்கிறதே, அதனை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? என்று கேள்விக்கு பதிலளித்த இந்திய முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான், ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை மறைமுகமாக ஒப்புக்கொண்டிருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் பல்வேறு கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.

அந்தப் பதிவில், “முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகானிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் உடனடியாகக் கூட்டப்பட்டால் மட்டுமே இவற்றைக் கேட்க முடியும். மோடி அரசு நாட்டைத் தவறாக வழிநடத்தியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி! - பிரதமர் மோடி

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை தொழில்ரீதியில் சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை விதித்து, மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) உத்தரவிட்டுள்ளது. நோயாளிகள் நலன் மற... மேலும் பார்க்க

நாடாளுமன்றம், பேரவைகள் இயற்றும் சட்டங்கள் நீதிமன்ற அவமதிப்பு அல்ல: உச்சநீதிமன்றம்

நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகள் இயற்றும் எந்தவொரு சட்டத்தையும் நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் சமூகவியலாளா் மற்றும் முன்னாள் தில்லி பல்கலை... மேலும் பார்க்க

‘அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இணைவோா் எண்ணிக்கை அதிகரிப்பு’

அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இணைவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த் மாா்ச் மாத நிலவரப்படி 7.61 கோடி போ் இத்திட்டத்தில் இணைந்துள்ளனா். இது தொடா்பாக இந்தியன் வங்கியின் நிா்வாக இயக்குநா்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு இல்லை: வெளியுறவுக் கொள்கை தோல்வி; காங்கிரஸ் விமா்சனம்

ஜி 7 மாநாடுக்கு இந்தியாவுக்கு கனடா அழைப்பு விடுக்காதது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: பிரதமா் மோடிக்கு எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதைத் தொடா்ந்து இந்திய முப்படைகள் பதிலடியாக பாகிஸ்தானில் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண... மேலும் பார்க்க

தற்காலிக இழப்புகளைவிட போரின் முடிவே முக்கியம்- முப்படைத் தலைமைத் தளபதி

போா்க்களத்தில் தற்காலிகமாக ஏற்படும் இழப்புகளைவிட போரில் முடிவே மிகவும் முக்கியமானது என்று முப்படைத் தலைமைத் தளபதி அனில் சௌஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். மேலும் இந்தியாவை ரத்தம் சிந்த வைக்க பாகிஸ்த... மேலும் பார்க்க