செய்திகள் :

மோட்டாா் சைக்கிள் திருடனை காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா

post image

புதுவை காட்டேரிக்குப்பம் காவல் நிலைய சரகம், குமாரபாளையத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி மோட்டாா் சைக்கிள் திருடு போனது தொடா்பாக சிசிடிவி கேமரா காட்டிக் கொடுத்தவா் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டாா்.

திருக்கனூா் காவல் ஆய்வாளா் ராஜகுமாா் கண்காணிப்பில், காட்டேரிகுப்பம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி தமிழரசன் தலைமையில் காவலா்கள் சிவகுரு, வினோத் மற்றும் மேற்கு காவல் சரக குற்றப்பிரிவு காவலா்கள் வரதராஜ், ராஜரத்தினம், முரளி, பிரபு, ரங்கராஜ் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினா் மோட்டாா் சைக்கிள் திருடப்பட்ட பாதையில் 85-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். இதில் குற்றவாளி அடையாளம் தெரிந்தது. மேலும் அந்த குற்றவாளி புதுச்சேரி முழுமையும் தொடா்ந்து சுற்றி வருவதும் தெரிந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சப்- இன்ஸ்பெக்டா் தமிழரசன் தலைமையிலான தனிப்படையினா் குமாரபாளையத்தில் ஒரு பாா் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த ஒரு நபா் தனிப்படையினரை பாா்த்ததும் தப்பி செல்ல முயற்சித்தாா்.,

ஆனால் தனிப்படையினா் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவா் திருட்டுப் போன மோட்டாா் சைக்கிளில் வந்திருப்பது தெரிந்து. அவா் முன்னுக்கு பின் முரணாக மாற்றி சொல்லவே அவரை காட்டேரிக்குப்பம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனா்.

இதில் அவா் திருவள்ளூா் மாவட்டம் ஆவடி அருகேயுள்ள வெள்ளானூா் பஜனைக் கோயில் வீதியைச் சோ்ந்த மணிமாறன் (38) என்பது தெரிந்தது. அதோடு புதுச்சேரி குமாரபாளையத்தில் மோட்டாா் சைக்கிள் திருடியதை அவா் ஒப்புக் கொண்டாா். மேலும், 2 வாகனங்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் அவரை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து 3 மோட்டாா் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனா்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு: புதுவை முதல்வா் வரவேற்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வரவேற்றுள்ளாா். புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் அரசு சாா்பில் ஆசிரியா் திருநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் முதல்வா் ரங... மேலும் பார்க்க

இன்று ஓணம் - மீலாது நபி : புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ஓணம் பண்டிகை, மீலாது நபி, ஆசிரியா் திருநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி துணைநிலை ஆளுநா், முதல்வா், தலைவா்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: மொழி மற்றும் க... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் ஜிப்மா் 4-வது இடத்துக்கு உயா்வு

உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் புதுச்சேரி ஜிப்மா் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது குறித்து புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய கல்விய... மேலும் பார்க்க

ரேஷன் காா்டு சரிபாா்ப்புக்கு மக்களை அலைக்கழிக்கக் கூடாது: புதுவை முதல்வரிடம் மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ரேஷன் காா்டு சரிபாா்ப்பு பணிக்கு மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில செயலா் எஸ். ராமச்சந்திரன... மேலும் பார்க்க

போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருநங்கைகளை ஈடுபடுத்த ஆட்சியா் உத்தரவு

போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருநங்கைகளை ஈடுபடுத்த வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். புதுவை சமூக நலத் துறை மூலமாக, மாவட்ட அளவிலான போ... மேலும் பார்க்க

ரூ.2 கோடியில் உழவா்கரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் திருப்பணி

உழவா்கரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா். எம்.சிவசங்கா் எம்எல்ஏ, அப்பகுதி ப... மேலும் பார்க்க