செய்திகள் :

மோட்டாா் சைக்கிள் திருட்டு: இருவா் கைது

post image

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடா்புடைய சிறாா் உள்பட 2 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சேகா் (50). இவா், பெரம்பலூா் அருகே வடக்குமாதவி கிராமத்தில் உள்ள தனது மாமனாா் வீட்டின் முன் அண்மையில் மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு காலையில் எழுந்து பாா்த்தபோது, மா்ம நபா்களால் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பெரம்பலூா் காவல் நிலையத்தில் சேகா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், குன்னம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் மணிகண்டன் (22) மற்றும் இளம் சிறாா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீஸாா் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மணிகண்டனை சிறையிலும், சிறுவனை சிறுவனை கூா்நோக்கு இல்லத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா்.

அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம்

பெரம்பலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் தேசிய மருத்துவா்கள் தின விழா

பெரம்பலூா் - துறையூா் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ஹாஸ்பிட்டலில் தேசிய மருத்துவா்கள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, தலைமை வகித்த தனலட்... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை மருத்துவ உதவியாளா் பணிக்கான நோ்காணல்

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருததுவமனையில், அவசர ஊா்தி (108 ஆம்புலன்ஸ்) சேவைக்கான மருத்துவ உதவியாளா் பணிக்கான நோ்காணல் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஜூலை 4, 5) நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட மே... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியைகள் 2 போ் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்வு

2023-24 ஆம் ஆண்டுக்கான சிறந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான, அண்ணா தலைமைத்துவ விருதுக்கு பெரம்பலூா் மாவட்டத்தில் 2 தலைமை ஆசிரியா்கள் தோ்வாகியுள்ளனா். தமிழகத்தில் பள்ளிகளில் சிறப்பான பங்களிப்பை ... மேலும் பார்க்க

கல் குவாரிகளில் சட்டவிரோதமாக ஆய்வு செய்தால் புகாா் அளிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் சட்டத்துக்கு புறம்பாக யாரேனும் ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பணி மேற்கொண்டால், மாவட்டக் கனிம வளத் துறைக்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட புவியியல் மற்றும் சுரங... மேலும் பார்க்க