செய்திகள் :

ம.பி. பாஜக தலைவராக ஹேமந்த் குமார் தேர்வு!

post image

மத்தியப் பிரதேச பாஜக பிரிவின் புதிய தலைவராக எம்எல்ஏ ஹேமந்த் குமார் கண்டேல்வால் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

பாஜக மத்தியப் பிரதேச பிரிவுத் தலைவர் பதவிக்கு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த ஒரே வேட்பாளர் கண்டேவால் ஆவார். பெதுல் எம்எல்ஏ கண்டேவாலை புதிய மாநில பாஜக தலைவராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், கஜுராஹோ எம்.பி.யும், மாநில பாஜக தலைவருமான விஷ்ணு தத் சர்மா, மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சௌகான், வீரேந்திர குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2020 முதல் மாநிலத்தில் சர்மா உயர் நிறுவனப் பதவியை வகித்தவர். செவ்வாய்க்கிழமை கண்டேல்வாலின் முன்மொழிபவராக இருந்த முதல்வர் மோகன் யாதவ், மாநில பாஜக அலுவலகத்தில் வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்.

ஹேமந்த் கண்டேல்வாலின் தந்தை விஜய் குமார் கண்டேல்வால், பெதுல் தொகுதியிலிருந்து நான்கு முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர்.

2007 ஆம் ஆண்டு தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, ஹேமந்த் கண்டேல்வால், பெதுல் தொகுதியிலிருந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக மக்களவையில் நுழைந்தார்.

2010 முதல் 2013 வரை பாஜகவின் பெதுல் மாவட்டத் தலைவராகவும், 2013 முதல் 2018 வரை பெதுல் தொகுதியின் எம்எல்ஏவாகவும் பணியாற்றினார். 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் ஹேமந்த் கண்டேல்வால் மீண்டும் அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் மாநில பாஜகவின் பொருளாளராகவும் பணியாற்றினார், மேலும் தற்போது குஷாபாவ் தாக்கரே அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார்.

summary

Legislator Hemant Kumar Khandelwal was on Wednesday declared elected as the new president of the Madhya Pradesh BJP unit in the presence of senior party leaders.

தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?

மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட பிகார் பெண், தனது கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியிருக்கிறது.பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத... மேலும் பார்க்க

டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பாலியல் வன்கொடுமை! செல்ஃபி எடுத்து மிரட்டல்!

புணேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்து, இதுகுறித்து யாரிடமாவத... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை தொடக்கம்: புறப்பட்டது 2வது குழு!

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே அமர்நாத் யாத்திரை கோலகலமாக இன்று(ஜூலை 3) முதல் தொடங்கியுள்ளது. தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோ... மேலும் பார்க்க

தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?

தில்லி குடியிருப்பில் இருந்து தாய் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.மேலும், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.என்ன நடந்தது... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி 8 நாள்கள் 5 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான புதன்கிழமை கானா நாட்டுக்குச் ச... மேலும் பார்க்க

கேரள சுற்றுலாத் துறைக்கு விளம்பர மாடலான பிரிட்டன் போா் விமானம்!

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின் எஃப்35 போா் விமானத்தை கேரள சுற்றுலாத் துறை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்தியுள்ளது பலரின் கவனத்தை ஈா்த்துள்ளது. கடந்த ... மேலும் பார்க்க