செய்திகள் :

'யார் அந்த சார்? என்ற பிரசாரத்தை செய்து அசிங்கப்பட்டது எடப்பாடிதான்' - திண்டுக்கல் லியோனி

post image

வருகிற ஜுன் 22 ஆம் தேதி மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்திற்கும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் ஐ.லியோனி

இது முருகனுக்கே நன்றாகத் தெரியும்!

இந்நிலையில் இந்த மாநாடு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் திண்டுக்கல் ஐ.லியோனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முதலமைச்சர் தலைமையில் நடந்ததுதான் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு.

அதில் ஆதினம், நீதியரசர்கள், வெளிநாட்டில் இருக்கக்கூடிய பக்தர்கள் எல்லோரும் கலந்துகொண்டார்கள். தற்போது நடைபெறவுள்ள மாநாடைப் பொறுத்தவரைக்கும் முருகனை அரசியலாக்கி, ஓட்டுக்காக நடத்தப்படுகின்ற மாநாடு இது. இது முருகனுக்கே நன்றாகத் தெரியும்.

அதனால் இந்த மாநாடு திட்டமிட்டு மத வெறியைப் பரப்புவதற்காக நடத்தப்படுகின்ற மாநாடு என்பது பொதுமக்களுக்கு தெரியும். அதனால் இதை பொதுமக்களே புறக்கணிப்பார்கள்” என்று கூறியிருக்கிறார். 

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து எடப்பாடி குறித்து பேசிய அவர், “ திமுக கூட்டணிக்கு சிக்கல் வந்திருக்கிறது என்று தேவையில்லாமல் பேசுகிறார். ஆனால் திமுக கூட்டணி பலமாகத்தான் இருக்கிறது. எந்த ஒரு விரிசலும் திமுகவில் இல்லை. அது எடப்பாடியினுடைய கற்பனை.

அவர்தான் அமித் ஷாவின் மாயவலையில் சிக்கி வேதனையில் இருக்கிறார். யார் அந்த சார்? என்ற பிரசாரத்தை செய்து அசிங்கப்பட்டது எடப்பாடிதான்” என்று எடப்பாடியை விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"நீங்கதான் பெஸ்ட்; உங்களைப் போல நானும்..." - இணையத்தில் வைரலாகும் மோடி, மெலோனி உரையாடல் வீடியோ

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகிய நாடுகளின் தலைவர்களின் வருடாந்திர சந்திப்பான G7 உச்சி மாநாடு கனடாவின் கனனாஸ்கிஸ் நேற்று முன்தினம் (ஜூன் 16... மேலும் பார்க்க

ஈரான் அணுசக்தி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்; அணு சக்தி கசிகிறதா? - பாதிப்புகள் என்ன... IAEA எச்சரிக்கை!

'ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது' - இது இஸ்ரேல்,3 ஈரான் மீது தாக்குதல் நடத்த முன்வைத்த குற்றச்சாட்டு. கடந்த வெள்ளிக்கிழமை (மே 13) முதல், இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு திட்ட இடங்க... மேலும் பார்க்க

Meta: ``வாட்ஸ் ஆப்பை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்" - ஈரானின் முடிவும் மெட்டாவின் பதிலும்

இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து வரும் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால் ஈரானின் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

DMK: "இந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், திணறுகிறது திமுக" - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

"பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாகப் பதில் சொல்லத் திராணியின்றி அமைச்சர் பரிவாரங்களை வரிசையாக அனுப்பும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த முறை அமைச்சர் நேருவைக் காவு கொடுத்திருக்கிறார்" என்று அ.த... மேலும் பார்க்க

Israel: ``இஸ்ரேல் நமக்காக மிக மோசமான செயலை செய்கிறது" - ஈரானை எதிர்க்கும் ஜெர்மன் சான்சிலர்

ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாகக் குற்றம்சாட்டும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில், கனடாவில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் ஜெர்மன் Ch... மேலும் பார்க்க

Pakistan: இஸ்ரேல் - ஈரான் மோதலால் அச்சத்துக்குள்ளாகும் பாகிஸ்தான்; அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

ஈரானில் இருக்கும் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியதால், பல ஈரானிய ராணுவ அதிகாரிகள், அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஈரானும் எதிர்த்தாக்குதலைக் கொடுத்துவருகிறது. இஸ்ரேல் - ஈரான் மோதலி... மேலும் பார்க்க