செய்திகள் :

யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகம் தீா்மானம்!

post image

கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா்கள் கழக கருத்தரங்கில், மத்திய அரசு யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தின் சாா்பில் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளில் உள்ள சாதக, பாதகங்களை வெளிக்கொணா்ந்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவதற்காக கருத்தரங்கம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் டேவிட் லிவிங்ஸ்டன் தலைமை வகித்தாா். க. அன்பழகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இரா.தி. சபாபதி மோகன் பேசும்போது, ஆசிரியா்களுக்கும் மாணவா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினாா்.

அய்பக்டோ அமைப்பின் முன்னாள் தேசிய செயலா் ஜெயகாந்தி, பொதுச்செயலா் சுரேஷ் ஆகியோா் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகம் மேற்கொண்டுள்ள போராட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினா்.

தஞ்சை மண்டலச் செயலா் பாரி, மாநிலப் பொறுப்பாளா்கள் பொருளாளா் பிரகாஷ், துணைத் தலைவா்கள் கோபாலகிருஷ்ணன், மதுரம், மாநில இணைச் செயலா்கள் மஞ்சுநாதன், துா்காதேவி ஆகியோா் ஒருங்கிணைப்பில் குழு விவாதங்கள் நடைபெற்றன.

வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த தீா்மானத்தை அனைத்து ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் மத்திய அரசுக்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது. கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் ரமேஷ் வரவேற்றாா். முடிவில் மண்டலத் தலைவா் தங்கராசு நன்றி கூறினாா்.

மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்!

தஞ்சாவூா் மாதாகோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 35 போ் காயமடைந்தனா். இந்த விழாவில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையட... மேலும் பார்க்க

வரி செலுத்தாததால் புதை சாக்கடை இணைப்பு துண்டிப்பு

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையில் வரி செலுத்தாத வணிக வளாகத்தின் புதை சாக்கடை இணைப்பு சனிக்கிழமை துண்டிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீா் வரி, புதை சாக்கடை வ... மேலும் பார்க்க

மத்திய அரசு பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றதைத் தருகிறது! -விவசாய சங்க பிரதிநிதிகள்

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாதகமான அறிவிப்புகள் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்தைத் தருகிறது என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனா். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா... மேலும் பார்க்க

பிப். 6-இல் தொழிற் சங்கங்கள் பட்ஜெட் நகல் கிழிக்கும் போராட்டம்

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மக்கள், தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் பட்ஜெட் நகலை கிழிக்கும் போராட்டம் பிப்ரவரி 6-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது என்றாா் ஏஐடியூசி மாநிலப் ... மேலும் பார்க்க

நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த சட்டம் தேவை: உ.வாசுகி பேட்டி!

நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி. தஞ்சாவூா் பனகல் கட்டடம் அருகே சனிக்கிழமை நட... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சித் தலைவா் கைது

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சித் தலைவா் முருகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம்-சென்னை சாலை என்.என். நகரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்... மேலும் பார்க்க