செய்திகள் :

யூ-டியூபர் ஜோதி மல்ஹோத்ரா உளவு பார்த்தாரா? - விசாரணையில் சொல்லப்படுவதென்ன?

post image

பாகிஸ்தானின் முதன்மை உளவு அமைப்பான ISI-க்கு உளவு பார்த்ததாக 10-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் யூடியூபரும் ஒருவர்.

ஜோதி மல்ஹோத்ரா

தற்போது 5 நாள்கள் காவல்துறை கண்காணிப்பில் இருக்கும் மல்ஹோத்ராவிடம், தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA), புலனாய்வுப் பிரிவு (IB) மற்றும் ஹரியானா காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டு குழு விசாரணையில் ஹரியானாவைச் சேர்ந்த இவர், இந்திய ரகசிய ஏஜெண்ட்கள் பற்றி தகவல்களைப் பகிர்ந்ததாக இந்தியா டுடே தெரிவிக்கிறது. அந்த விசாணையில் வெளியான தகவல்கள் என மேலும் சில தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.

மல்ஹோத்ரா மற்றும் ஐ.எஸ்.ஐ-யைச் சேர்ந்த அலி ஹசன் இடையிலான வாட்ஸஅப் தொடர்புகளை ஆராய்ந்ததில், இந்தியாவின் இரகசிய நடவடிக்கைகள் தொடர்பான குறியீட்டு (Coded) உரையாடல்களைக் கண்டறிந்திருப்பதாகவும்,

ஒரு செய்தியில் 'அட்டாரி எல்லைக்கு வந்தபோது ரகசிய ஏஜென்ட்டுக்கு ஏதாவது சிறப்பு நெறிமுறைகள் வழங்கப்பட்டதை கவனித்தீர்களா?' என ஹசன், மல்ஹோத்ராவிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த உரையாடலில் "நெறிமுறை" மற்றும் "ரகசிய முகவர்" போன்ற சொற்கள் குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தப்படுவது, இந்திய அதிகாரிகளின் சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது.

ISI
ISI

மல்ஹோத்ரா தெரிந்தே இந்திய ரகசிய ஏஜென்ட்களை காட்டிக்கொடுக்க செயல்பட்டாரா அல்லது ஐ.எஸ்.ஐ-யின் பரந்த வலைப்பின்னலின் ஒரு பகுதியாக மேனிபுலேட் செய்யப்பட்டு ஆட்டி வைக்கப்பட்டாரா என்பதை உறுதிபடுத்தும் நோக்கில் விசாரணை நடந்து வருகிறது

மல்ஹோத்ரா 2023-ம் ஆண்டு சீக்கியர்களின் விழாவான வைசாகி திருவிழாவைக் காண முதல்முறையாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

`ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை... இதுதான் ஸ்டாலினின் கை!' - கேள்விகளை எழுப்பி சாடும் இபிஎஸ்

டெல்லியில் மே 24-ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நியாயமான நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டோடு கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த முதல்வர் ஸ... மேலும் பார்க்க

அனகாபுத்தூர் குடியிருப்புகள் புல்டோசர் கொண்டு அகற்றம்; வலுக்கும் எதிர்ப்புகள்; அரசின் விளக்கம் என்ன?

அனகாபுத்தூர் பகுதியில் அடையாறு ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் என அங்கு வசித்துவரும் மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு தமிழக அரசு இடித்து வருகிறது.அரசின் இத்தகைய செயலுக்கு மே 17 இயக்கம் உள... மேலும் பார்க்க

Kannada - Hindi சர்ச்சை: `முதலில் வங்கி ஊழியர்களுக்கு இந்த பயிற்சியைக் கொடுங்கள்'- கர்நாடக முதல்வர்

கர்நாடகாவில் எஸ்.பி.ஐ வங்கியில், உள்ளூர் வாடிக்கையாளரிடம் வங்கியின் மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்து, "இது இந்தியா இந்தியில்தான் தான் பேசுவேன். ஒருபோதும் கன்னடத்தில் பேசமாட்டேன்" என்று கூறும் வீடியோ இர... மேலும் பார்க்க

Pakistan: `ஃபீல்ட் மார்ஷல்' - ராணுவ தளபதி அசிம் முனீருக்கு பதவி உயர்வு! - பின்னணி என்ன?

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி 'ஆபரேஷன் சிந்தூர்'. மே 7-ம் தேதி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை தகர்த... மேலும் பார்க்க

`ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறியவர், என்னை பார்த்து..' - பழனிசாமியின் விமர்சனத்துக்கு ஸ்டாலின் பதில்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு டெல்லி செல்வது, தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது.இது குறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க