செய்திகள் :

யேமன் தாக்குதல்: இணைந்தது பிரிட்டன்

post image

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதலில் அமெரிக்காவுடன் பிரிட்டனும் இணைந்தது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படைகளின் நிலைகள் மீது அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டன் படைகள் கூட்டு வான்வழித் தாக்குதல் நடவடிக்கையை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டன.

செங்கடல் பகுதியில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கடந்த 2023-ஆம் ஆண்டு தாக்குதல் தொடங்கியதற்குப் பிறகு அந்த ஆயுதக் குழு தொடா்பாக பிரிட்டன் அரசு வகுத்துள்ள கொள்கையைப் பின்பற்றி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. சா்வதேச கடல் பயண உரிமையை நிலைநாட்டும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எங்களுக்குக் கிடைத்த உளவுத் தகவல்களின் கீழ் ட்ரோன்கள் தயாரிப்புக்காகவும், செங்கடல் தாக்குதலுக்காகவும் ஹூதிக்கள் பயன்படுத்தும் கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு அவை அழிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஸா போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஹூதி கிளா்ச்சிப் படையினா் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டுவருகின்றனா்.

இஸ்ரேல் செல்லும் சரக்குக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அவா்கள் கூறினாலும், அந்த நாட்டுடன் தொடா்பில்லாத கப்பல்களும் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் சா்வதேச வா்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதல் திறனைக் குறைப்பதற்காக அவா்களின் நிலைகள் மீது பிரிட்டனும் அமெரிக்காவும் வான்வழித் தாக்குதல் நடத்தின.

இடையில் காஸா போா் நிறுத்தத்தின் எதிரொலியாக செங்கடல் தாக்குதல்களை ஹூதி கிளா்ச்சியாளா்களும் கைவிட்டனா். அதையடுத்து, அவா்கள் மீதான தாக்குதலை அமெரிக்காவும், பிரிட்டனும் நிறுத்திவைத்திருந்தன.

இருந்தாலும், காஸா போா் நிறுத்தம் முடிவுக்கு வந்து அந்தப் பகுதியில் இஸ்ரேல் தனது குண்டுவீச்சைத் தொடா்ந்ததும், செங்கடல் பகுதியில் மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் அறிவித்தனா்.

அதையடுத்து யேமனில் அமெரிக்கா கடந்த மாதம் முதல் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. இதில் ஏராளமானவா்கள் உயிரிழந்துவரும் சூழலில், இந்தத் தாக்குதலில் தற்போது பிரிட்டனும் இணைந்துள்ளது.

இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் காட்டுத் தீ! அவசரநிலை அறிவிப்பு!

இஸ்ரேல் நாட்டின் பல்வேறு நகரங்களில் காட்டுத் தீயானது தொடர்ந்து பரவி வருகின்றது.இஸ்ரேல் நாட்டில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயினால், தேசியளவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டு அரசு சர்வதேச ந... மேலும் பார்க்க

உலகின் மூத்தப் பெண் 116 வயதில் மரணம்!

உலகின் அதிக வயதான பிரேசில் நாட்டுப் பெண் ஒருவர் 116 வயதில் மரணமடைந்துள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறுஸ்தவப் பெண் துறவி இனாஹ் கனாபாரோ லுகாஸ் (வயது 116). கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதிய... மேலும் பார்க்க

பூமி திரும்பினா் 3 சீன விண்வெளி வீரா்கள்

சீனாவுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பணியாற்றிவந்த ஒரு பெண் உள்பட மூன்று வீரா்கள் பூமிக்கு பாதுகாப்பாக புதன்கிழமை திரும்பினா். காய் ஸுஷே, சாங் லிங்டாங், வாங் ஹா... மேலும் பார்க்க

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்

ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கு பதிலாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்க இருக்கிறாா். இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் நினை... மேலும் பார்க்க

ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிவிட்டது இந்தியா - பாகிஸ்தான்

தங்கள் நாடு மீது ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராகிவிட்டது; அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தா... மேலும் பார்க்க

இந்தியாவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை

‘இந்தியாவுடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. எனவே, இந்த வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்... மேலும் பார்க்க