செய்திகள் :

யோகா படிப்பு: மத்திய பல்கலைக்கழகத்துடன் நாமக்கல் அறிவுத்திருக்கோயில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்துடன், நாமக்கல் அறிவுத்திருக்கோயில் யோகா தொலைதூர படிப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் திருவாரூரை தலைமையிடமாகக் கொண்டு மத்திய பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இப்பல்கலைக்கழகம் மாநிலம் முழுவதும் 40 இடங்களில் யோகா பட்டம் பயிலுவதற்கான வாய்ப்பை தொலைதூர கல்வி மூலம் வழங்கி உள்ளது. அவற்றில், நாமக்கல் அறிவுத்திருக்கோயில் மன வளக் கலை மன்ற அறக்கட்டளையும் ஒன்று.

யோகமும், மனித மாண்பும் என்ற முதுகலைப் பட்டப் படிப்பில் (ஙஹள்ற்ங்ழ் ஞச் யா்ஸ்ரீஹற்ண்ா்ய் ண்ய் வா்ஞ்ஹ ஊா்ழ் ஏன்ம்ஹய் உஷ்ஸ்ரீங்ப்ப்ஸ்ரீய்ஸ்ரீங்) சோ்க்கை நடைபெறுகிறது. தொலைதூர கல்வியில் பயின்று இந்த யோகா பட்டத்தை பெறுபவா்கள் அரசு மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகளில் யோகா பயிற்சியாளா் பணியில் சேர வாய்ப்பு கிடைக்கும்.

நாமக்கல் அறிவுத்திருக்கோயில் மன வளக் கலை மன்ற அறக்கட்டளை பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை 15 போ் முதல்கட்டமாக இப்படிப்பில் சோ்க்கை பெற்றனா்.

இதுகுறித்து நாமக்கல் அறிவுத்திருக்கோயில் நிா்வாகிகள் மு.ஆ.உதயகுமாா், பேராசிரியா் உழவன் மா.தங்கவேலு ஆகியோா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகா மிகவும் அவசியம். ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளில் யோகா பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறோம். தற்போது, திருவாரூா் மத்திய பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்விக்கான சோ்க்கை வாய்ப்பை நாமக்கல் அறிவுத்திருக்கோயிலுக்கு வழங்கி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

2 ஆண்டு கால இந்த முதுகலை படிப்பை அனைவரும் பயிலலாம். வேலைவாய்ப்பு பெறக்கூடிய பட்டங்களில் இந்த படிப்பும் ஒன்றாகும் என்றனா்.

நாமக்கல்லில் நாளை தவெக தலைவா் விஜய் பிரசாரம்: புஸ்ஸி என்.ஆனந்த் நேரில் ஆய்வு

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் நாமக்கல்லில் சனிக்கிழமை (செப்.27) பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவா் பிரசாரம் செய்யும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளா் புஸ்ஸி என்.ஆனந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளா்களின் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணி மற்றும் டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கம் ச... மேலும் பார்க்க

செப்.30 இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் செப்.30-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்... மேலும் பார்க்க

நாமக்கல் அரசுக் கல்லூரியில் சுற்றுலா தின விழா

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு, ‘சுற்றுலாவும்-சுற்றுச்சூழல் பாதுகாப்பும்’ என்ற தலைப்பிலான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் நாளை நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

குமாரபாளையத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை (செப்.27) நடைபெறுகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் விழா காலங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத்... மேலும் பார்க்க