செய்திகள் :

ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

post image

நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில்,

"இந்தியாவின் பத்ம விபூசண்! தாதா சாகிப் பால்கே விருது பெற்ற கலைஞன், ஆறிலிருந்து ஐம்பது வரையில் அனைவருக்குமான சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந்தை இன்று அவர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினேன். அவர் வாழ்த்துக்களைப் பெற்று மகிழ்ச்சி அடைந்தேன்!

அரை நூற்றாண்டு காலம் இந்திய திரையுலகை ஆண்ட கலைஞன், நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும் என்றும் அழியாமல் காட்சி தரும் தேசிய நடிகர்!

அண்ணன் ரஜினிகாந்த் இன்னும் பல நூற்றாண்டு காலம் திரை உலகை ஆண்டு தாயகப் பணி ஆற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து, அவரை வாழ்த்தி வணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tamilnadu BJP Leader Nainar Nagendran meets Actor Rajinikanth

இதையும் படிக்க | வாக்குத் திருட்டு: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம்?

தவெக மாநாட்டில் பிளக்ஸ் பேனர் வைக்க முயன்ற மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம்கரிசல் குளத்தில் தவெக மாநாட்டிற்கு பிளக்ஸ் பேனர் வைப்பதற்காகக் கம்பி எடுத்து வந்தபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவ... மேலும் பார்க்க

50 ஆம் ஆண்டு திருமண நாள்! மனைவி துர்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

50 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி, மனைவி துர்காவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.திருமண நாளை முன்னிட்டு மறைந்த திமுக தலைவரும் தனது தந்தையுமான மு. கருணாநிதியின் நின... மேலும் பார்க்க

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஆகஸ்ட் 20) காலை 8.00 மணியளவில் அதன் முழு க... மேலும் பார்க்க

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.சென்னை மாநகராட்சியின், ... மேலும் பார்க்க

சிறுவன் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை!

ஆவடி அருகே 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் புதன்கிழமை திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.திருவள்... மேலும் பார்க்க

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம்!

மதிமுக துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாக அந்த கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார்.மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவ... மேலும் பார்க்க