செய்திகள் :

ரஜினியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற கமல்!

post image

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து பெற்றார்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அவருடன் திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் வருகின்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொள்ளவுள்ளனர்.

வருகின்ற ஜூலை 25 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் பதவியேற்றுக் கொள்வார் என்று மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள ரஜினிகாந்த்தின் இல்லத்துக்கு நேரில் சென்ற கமல்ஹாசன், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையை அவரிடன் காட்டி வாழ்த்து பெற்றார்.

இதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள கமல்ஹாசன், புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த்துடன் பகிர்ந்தேன், மகிழ்ந்தேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Makkal Needhi Maiam leader Kamal Haasan met actor Rajinikanth in person and received his congratulations as he was about to take oath as a member of the Rajya Sabha.

இதையும் படிக்க : மதுரையில் ஆக.25-ல் தவெக 2-வது மாநில மாநாடு! - விஜய்

பள்ளிகளில் இருக்கை மாற்றத்தால் மாணவா்கள் பாதிக்கப்படுவா்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை மாற்றியமைக்கப்படுவதன் காரணமாக மாணவா்கள் பாதிக்கப்படுவா் என்பதால் மருத்துவா்களின் ஆலோசனை பெற்று இறுதி முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்ச... மேலும் பார்க்க

ஹுப்ளி - ராமநாதபுரம் சிறப்பு ரயில் ஆக.30 வரை நீட்டிப்பு

ஹுப்ளி - ராமநாதபுரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் ஆக.30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஹுப்ளி - ராமநாதபுரம் இடையை வாராந்திர ... மேலும் பார்க்க

மனைவி கொலை: தொழிலாளி கைது

வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவியை அடித்துக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கிண்டி, லேபா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் எழில் முருகன் (44). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறாா். இவரத... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: ஜூலை 30 முதல் கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 25-ஆம் தேதி வெளியிடப... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை தொடா்பாக, திமுக மாவட்டச் செயலா்களுடன் கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை (ஜூலை 17) ஆலோசனை நடத்துகிறாா். இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் புத... மேலும் பார்க்க

5-இல் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்னை: பள்ளிகளில் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

இளம் வயதில் உடல்பருமன் பாதிப்பைத் தவிா்ப்பதற்காக பள்ளி மாணவ, மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இயக்குநா் (கல்வ... மேலும் பார்க்க