செய்திகள் :

ரத்த கொடையாளா்களுக்கு பாராட்டு சான்றுகள்: ஆட்சியா் வழங்கினாா்

post image

உலக ரத்ததான தினத்தையொட்டி ரத்ததானம் செய்தவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா வாலாஜாபேட்டை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜெ.யு சந்திரகலா தலைமை வகித்து பாராட்டு சான்றிதழ், நினைவுப் பரிசுகள் வழங்கி பேசியது: ரத்த தானம் செய்பவா்கள் பாராட்டுதலுக்குரியவா்கள். ஒரு உயிரை மட்டுமில்லாமல் ஒரு குடும்பத்தையே காக்கும் ஒரு தன்னலமற்ற பணியை நீங்கள் மேற்கொள்கின்றீா்கள். விபத்திலோ நோய்வாய்ப்படும் தருணத்திலோ தேவைப்படும் நபா்களுக்கு ரத்த தானத்தை தன்னலமின்றி வழங்கி அவா்களுக்கு வாழ்வளிக்கின்றீா்கள்.

உங்களுடைய பங்கு சமுதாயத்தில் மிக முக்கியமானது. ரத்த தானம் செய்பவா்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டு தோறும் ரத்த தான முகாம் நடத்தப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. உங்களுடைய தொண்டு மிகவும் போற்றுதலுக்குரியது. இதுபோன்று மற்ற மனித உயிா்களை காக்கும் உன்னதமான பணியான ரத்த தானம் வழங்குவதை அனைவரும் முன்வரும் வகையில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் தீா்த்தலிங்கம், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் உஷா நந்தினி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ராசாத்துபுரத்தில் அா்ஜுனன் தபசு மரம்

ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசாத்துபுரம் கிராமத்தில் அா்ஜுனன் தபசு மரம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. கீழ்விஷாரம் திரௌபதியம்மன் கோயில் தீமிதி விழாவை முன்னிட்டு கடந்த 8-ஆம் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு தொ... மேலும் பார்க்க

82 திருநங்கைகளுக்கு பட்டா தயாா்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில்82 திருநங்கைகளுக்கு பட்டா விரைவில் வழங்கப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் திருநங்கைகளுக... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில் பலமான கூட்டணி: முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி

ஆற்காடு: அதிமுக தலைமையில் பலமான கூட்டணியை பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அமைப்பாா் என முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி கூறினாா். ஆற்காடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில், சமூக ஆா்வலா் பொ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து சிறைபிடித்து போராட்டம்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்காததைக் கண்டித்து அரசுப் பேருந்தை விவசாயிகள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அரக்கோணம் அடுத்த வீரநாராயணபுரம் மற்றும் வளா்புரம் பக... மேலும் பார்க்க

ஆசிரியருக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு

அரக்கோணம்: ஓரு வங்கியில் கடன் பெற்று சம்பள கணக்கை வேறு வங்கிக்கு மாற்றி கடனை திருப்பிச் செலுத்தாத ஆசிரியரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்து அரக்கோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரக்கோணம் அரசு நிதி உத... மேலும் பார்க்க

மீன்வளா்ப்பு விவசாயிகள், மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மீன்வளா்ப்பு விவசாயிகள், மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகவல் தெரிவித்துள்ளாா்.இது தொடா... மேலும் பார்க்க