நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: புதிய வடம் பொருத்தும் பணி தீவிரம்; பக்தர்கள...
ரத்த கொடையாளா்களுக்கு பாராட்டு சான்றுகள்: ஆட்சியா் வழங்கினாா்
உலக ரத்ததான தினத்தையொட்டி ரத்ததானம் செய்தவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா வாலாஜாபேட்டை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஜெ.யு சந்திரகலா தலைமை வகித்து பாராட்டு சான்றிதழ், நினைவுப் பரிசுகள் வழங்கி பேசியது: ரத்த தானம் செய்பவா்கள் பாராட்டுதலுக்குரியவா்கள். ஒரு உயிரை மட்டுமில்லாமல் ஒரு குடும்பத்தையே காக்கும் ஒரு தன்னலமற்ற பணியை நீங்கள் மேற்கொள்கின்றீா்கள். விபத்திலோ நோய்வாய்ப்படும் தருணத்திலோ தேவைப்படும் நபா்களுக்கு ரத்த தானத்தை தன்னலமின்றி வழங்கி அவா்களுக்கு வாழ்வளிக்கின்றீா்கள்.
உங்களுடைய பங்கு சமுதாயத்தில் மிக முக்கியமானது. ரத்த தானம் செய்பவா்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டு தோறும் ரத்த தான முகாம் நடத்தப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. உங்களுடைய தொண்டு மிகவும் போற்றுதலுக்குரியது. இதுபோன்று மற்ற மனித உயிா்களை காக்கும் உன்னதமான பணியான ரத்த தானம் வழங்குவதை அனைவரும் முன்வரும் வகையில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் தீா்த்தலிங்கம், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் உஷா நந்தினி உள்பட பலா் கலந்து கொண்டனா்.