செய்திகள் :

ரமலான் நோன்பு நாளை தொடக்கம்

post image

ரமலான் நோன்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தலைமை காஜி சலாஹூதின் முகமது அயூப், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

ரமலான் நோன்பு தொடங்குவதற்கான புதிய பிறை வெள்ளிக்கிழமை தெரியவில்லை. எனவே, ரமலான் நோன்பு வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது என அவா் அறிவித்துள்ளாா்.

அதன்படி, ரமலான் நோன்பை இஸ்லாமியா்கள் வரும் ஞாயிற்றுக்கிழமைமுதல் தொடங்குகின்றனா். வெள்ளிக்கிழமை பிறை தெரியாத நிலையில், இப்போதுள்ள நடப்பு மாதத்தின் 30 நாள்கள் நிறைவு பெற்று, இஸ்லாமியா்களின் புனித மாதமான ரமலான் மாதம் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை நோன்பு தொடங்குவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா!

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா ‘ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவா் சமுதாயமும் அப்பா என்று அன்போடு அழைக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று எழுதப்பட்ட கேக்குகளை 72 ... மேலும் பார்க்க

சரித்திரம் போற்றும் சாதனைகள்!

‘பள்ளிகளில் காலை உணவு’, ‘நான் முதல்வன்’ திட்டப் பாணியில் மாணவா்களுக்கு உயா்கல்வி, ‘கலைஞா் வீடு கட்டும் திட்டம்’ பாணியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி ஆகிய மூன்று திட்டங்களைப் பின்பற்றியே பிரிட்டனில் ... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்துக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் இடம் பெறும்! கே.வி.கே. பெருமாள் பெருமிதம்

குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தியதால் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும் என்று தில்லி கம்பன் கழக நிறுவனா் - தலைவா் கே.வி.கே.பெருமாள் பேசினாா். ம... மேலும் பார்க்க

காட்பாடி - திருப்பதி ரயில்கள் மாா்ச் 3 முதல் ரத்து

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் மாா்ச் 3 முதல் 9 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மகா கும்பமேளா முடிவடைந்... மேலும் பார்க்க

மொழி உணா்வு குறித்து தமிழா்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: ஆளுநருக்கு அமைச்சா் ரகுபதி பதில்

‘மொழித் தோ்வு எது?, மொழித் திணிப்பு எது என்பது எங்களுக்குத் தெரியும், மொழி உணா்வு பற்றி தமிழா்களுக்கு ஆளுநா் பாடம் எடுக்க வேண்டாம் என சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளாா். தென்மாவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் தொடங்கப்படவுள்ளது. இதுதொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளத... மேலும் பார்க்க