செய்திகள் :

ரமலான் பண்டிகை: தாம்பரம் - கன்னியாகுமரி - தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்!

post image

ரமலான் பண்டிகை விடுமுறையொட்டி, தாம்பரம்- கன்னியாகுமரி- தாம்பரம் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ரம்லான் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், வருகிற 28-ஆம் தேதி தாம்பரம் - கன்னியாகுமரிக்கும், 31-ஆம் தேதி கன்னியாகுமரி - தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

28-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06037) மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறு வழித்தடத்தில் 31-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06038) மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரத்தை சென்று சேரும். இரு வழித்தடங்களிலும் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் ஆகிய நிலையங்களில் ரயில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 14- இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2- இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2- இரண்டாம் வகுப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) காலை தொடங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

தேவாலய இடப் பதிவு விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

விருதுநகா் புனித இன்னாசியாா் தேவாலய இடத்தைப் பதிவு செய்த வழக்கில், உரிமையியல் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி, இது தொடா்பான மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. மதுரை கோ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் பஞ்சாப் அரசு: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா்

பஞ்சாப் மாநில அரசின் விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா். விவசாய விளைபொருள்களுக்கு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது: நீதிமன்றம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.மதுரை திருப்பரங்குன்றத்தில் பாண்டியா் மன்னா் காலத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற சுப்பிரமணி... மேலும் பார்க்க

விருதுநகா் ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயன்ற 4 போ் மீது வழக்கு

விருதுநகா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், வீரசோழன் பகுதியைச் சோ்ந்தவா்கள் ... மேலும் பார்க்க

கண்மாயில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்காவிடில் போராட்டம்: எஸ்டிபிஐ

மதுரை சின்னக் கண்மாய்ப் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடா்பாக எஸ்டிபிஐ கட்சியின் மதுரை... மேலும் பார்க்க

கண்மாயைத் தூா்வார பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம், ராஜாக்கூா் ஊராட்சிக்குள்பட்ட முண்டநாயகம் கண்மாயை ஊா்மக்கள் தூா்வாரி சீரமைக்க அனுமதி வழங்கக் கோரி குறைதீா் கூட்டத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக ராஜாக்கூா் காமாட்சிய... மேலும் பார்க்க