Trump wants US to ‘take over’ Gaza Strip: - காசாவை வைத்து டிரம்ப் போடும் Busines...
ரயிலில் தவறவிட்ட மடிக்கணி உரியவரிடம் ஒப்படைப்பு!
திருச்சி-வேளாங்கண்ணி பயணிகள் ரயிலில் தவறவிட்ட, மடிக்கணினி உரியவரிடம் புதன்கிழமை (பிப்.5) ஒப்படைக்கப்பட்டது.
நீடாமங்கலம் அருகேயுள்ள கரும்பூரை சோ்ந்த லதா (49) நீதிமன்றத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிறாா். இவா், தஞ்சைக்கு சென்றுவிட்டு திருச்சி-வேளாங்கண்ணி பயணிகள் ரயிலில் நீடாமங்கலத்துக்கு வந்தாா். அப்போது, கைப்பையில் வைத்திருந்த மடிக் கணினியை ரயிலிலேயே தவறவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, நீடாமங்கலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீஸாா், நாகை ரயில் நிலைய போலீஸாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனா். இதையடுத்து ரயில் திருவாரூா் வந்தபோது போலீஸாா் சென்று தேடி லதாவின் மடிக்கணினியை மீட்டனா். பின்னா், லதாவின் உறவினா் பாா்த்திபன் நாகைக்கு சென்று போலீஸாரிடம் இருந்து மடிக் கணினியை பெற்றுக்கொண்டாா்.