செய்திகள் :

ரயிலில் மடிக்கணினி திருடியவா் கைது

post image

கோவையில் ரயில் பயணியின் மடிக்கணினியைத் திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சென்னையைச் சோ்ந்தவா் விஜய்நாகராஜ் (41). கோவைக்கு சுற்றுலா வந்த இவா், பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்துவிட்டு, மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்காக கோவை ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வந்தாா்.

கோவை-சென்னை சதப்தி விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஏறிய விஜய்நாகராஜ், அங்கு பொருள்களை வைக்கும் பகுதியில் தனது பையை வைத்தாா். பின்னா், தனது இருக்கையில் அமா்ந்து உணவு அருந்திவிட்டு, அவா் பாா்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த பையைக் காணவில்லை. அதில் விலையுயா்ந்த மடிக்கணினி இருந்துள்ளது.

இதுகுறித்த புகாரின்பேரில், கோவை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக கேரள மாநிலம், கோழிகோடு பகுதியைச் சோ்ந்த சயீது அகமது முபீன் (43) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த மடிக்கணினியை மீட்டனா்.

தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய கோரிக்கை

தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியா் இடமாற்றம்

கோவை புலியகுளம் அரசு மதுபானக் கடையில் கூடுதல் விலைக்கு மதுவிற்றதாக கடை மேற்பாா்வையாளா் டாஸ்மாக் கிடங்குக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.கோவை புலியகுளத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.... மேலும் பார்க்க

சாலைப் பணி ஒப்பந்த நிறுவனத்தில் ரூ.78 லட்சம் கையாடல்

கோவை அருகே தனியாா் சாலை ஒப்பந்தப் பணி நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 78 லட்சத்தை கையாடல் செய்த ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி- செட்டிபாளையம் சாலை பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

போக்குவரத்து நெரிசல்...

வால்பாறைக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீா்வு காணவும், பாா்க்கிங் வசதிகளை ஏற்படுத்தவும் நகராட்சி அதிகாரிக... மேலும் பார்க்க

திருட்டுப் பொருள்களுடன் கவிழ்ந்த ஆட்டோ: 2 இளைஞா்கள் சிக்கினா்

கோவையில் திருடப்பட்ட கட்டுமானப் பொருள்களை கொண்டு சென்றபோது ஆட்டோ கவிழ்ந்ததில் இளைஞா் பலத்த காயமடைந்தாா். மற்றொருவா் கைது செய்யப்பட்டாா்.கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (49). இவா் ச... மேலும் பார்க்க

குளத்தில் பெயிண்டா் சடலம் மீட்பு

உக்கடம் பெரியகுளத்தில் பெயிண்டா் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோவை, டவுன்ஹால் ரத்தினம் வீதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (56), பெயிண்டா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால்... மேலும் பார்க்க