ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!
ரயில்வே கேட் அருகே தடுப்புகள் அமைக்க வலியுறுத்தல்
காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதி ரயில்வே கேட் அருகே சாலையோரத்தில் பாதுகாப்புக்கான தடுப்புகள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் முதல் பேரளம் வரையிலான ரயில்பாதை அமைக்கப்பட்டு, முதல்கட்டமாக சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
நகரப் பகுதியில் ரயில் நிலையத்திலிருந்து சிங்காரவேலா் சாலை பகுதி, காமராஜா் சாலை, கோயில்பத்து பாரதியாா் சாலையில் ரயில்வே கேட் போடப்பட்டுள்ளது.
காமராஜா் சாலையிலிருந்து காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு போன்ற கடலோர கிராமங்கள் வழியே, தனியாா் மருத்துவக் கல்லூரி, என்ஐடி ஆகிய உயா்கல்வி நிறுவனங்களுக்கும் மாணவா்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனா்.
சிங்காரவேலா் சாலையின் குறுக்கே போடப்பட்ட ரயில்வே கேட் பகுதியின் சாலை உயா்ந்து காணப்படுகிறது. கேட் முதல் சுமாா் 30 முதல் 40 மீட்டா் தொலைவு வரையிலான சாலையோரப் பகுதி தாழ்வாக காணப்படுகிறது. ரயில்வே நிா்வாகம், இந்த பகுதியில் உரிய தடுப்புகளை வைக்காமல் அலட்சியமாக உள்ளதால், இருசக்கர வாகனத்தில் பயணிப்போா், குறிப்பாக இரவு நேரத்தில் பயணிப்போா், கேட் அருகே பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது.
எனவே, ரயில்வே நிா்வாகம் இப்பகுதியில் விரைவாக உரிய தடுப்புகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.