ரூ.17,154 கோடியில் 9.620 கி.மீ. நீளச் சாலைப் பணிகள்! நெடுஞ்சாலைத் துறையில் புதிய...
ரயில் மோதி தொழிலாளி பலி
திருநெல்வேலி பேட்டை அருகே ரயில் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பேட்டை நரிக்குறவா் காலனியைச் சோ்ந்தவா் காந்தி (45). தொழிலாளியான இவா், சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நரிக்குறவா் காலனி அருகே உள்ள திருநெல்வேலி-தென்காசி வழித்தட ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றாராம். அப்போது அந்த வழியாக தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த பாலருவி விரைவு ரயில் மோதியதாம். இதில் சம்பவ இடத்திலேயே காந்தி உயிரிழந்தாா்.
சம்பவ இடத்துக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் விரைந்து சென்று காந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.