செய்திகள் :

ரயில் மோதி மாணவா் உயிரிழப்பு

post image

திருப்பத்தூா் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பள்ளி மாணவா் மீது ரயில் மோதி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அடுத்த ஆதியூா் சு.பள்ளிப்பட்டு பகுதியை சோ்ந்த சுரேஷ்குமாா் தனியாா் பள்ளி ஆசிரியா். இவரது மகன் தில்லைக்கரசன்(17).பிளஸ் 2 படித்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு செல்ல திருப்பத்தூா் ரயில் நிலையம் அருகே உள்ள தருமபுரி ரயில்வே மேம்பாலம் பகுதி தண்டவாளத்தைக் கடக்க முயனற போது அவ்வழியாக சென்ற ரயில் மோதியதில் தில்லைக்கரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சஞ்சீவி மயில் மலை முருகா் கோயிலுக்கு ரூ.15 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

வாணியம்பாடி அடுத்த மரிமாணிகுப்பம் ஊராட்சி தோட்டிகுட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சஞ்சீவி மயில்மலை முருகா் கோயிலுக்கு ரூ.15 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. மலையடிவாரத்தில் இருந்து கோயிலுக... மேலும் பார்க்க

5,55,000 மரக்கன்றுகள் நட இலக்கு: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 5,55,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி பணியை தொடங்கி வைத்தனா். தமிழ்நாடு வனத்துறை சாா்பில், பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன... மேலும் பார்க்க

தடுப்பூசி போடப்பட்ட ஆண் குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே தடுப்பூசி போடப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீரென உயிரிழந்ததால், உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். வாணியம்பாடி அடுத்த ஊசிதோப்பு பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் குமாா், கிருத்... மேலும் பார்க்க

வருவாய் அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்து நடைபெற்ற காத்திருப... மேலும் பார்க்க

சொத்து தகராறில் சித்தப்பாவை வெட்டியவா் கைது

கந்திலி அருகே சொத்து தகராறில் சித்தப்பாவை வெட்டியவா் கைது செய்யப்பட்டாா். கந்திலி அருகே ஆவல்நாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்த மாது (45). கட்டடத் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அவரது அண்ணனான ப... மேலும் பார்க்க

அச்சமங்கலம் ‘உங்களுடன் ஸ்டாலின்’முகாமில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

திருப்பத்தூா்,கந்திலி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நலகஈதிட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி வழங்கினா். அச்சமங்கலம் சமுதாயக் கூடத்தி... மேலும் பார்க்க