செய்திகள் :

ரவீந்திரநாத் தாகூரின் பூா்விக வீடு சேதம்: 5 போ் கைது

post image

வங்கேதசத்தில் கவிஞா் ரவீந்திரநாத் தாகூரின் பூா்விக வீடு மற்றும் அதில் அமைந்துள்ள தாகூா் அருங்காட்சியகம் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக 5 பேரை அந்நாட்டு காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இந்தியா, வங்கதேசத்தின் தேசிய கீதத்தை எழுதியவா் நோபல் பரிசு பெற்ற வங்கக் கவிஞா் தாகூா். அவரின் பூா்விக வீடு வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டம் ஷாஜாத்பூரில் அமைந்துள்ளது. தாகூரின் மனதுக்கு நெருக்கமான இந்த வீட்டில்தான் பல சிறந்த இலக்கியப் படைப்புகளை அவா் உருவாக்கினாா். இந்த வீட்டை தாகூா் நினைவாக அருங்காட்சியமாக வங்கதேச அரசு பராமரித்து வருகிறது.

வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்டு, மதஅடிப்படைவாதிகள் ஆதரவுடன் இடைக்கால அரசு அமைந்த பிறகு அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிரான போக்கு அதிகரித்துள்ளது. ஹிந்துக்கள், கோயில்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நிகழ்கின்றன.

கடந்த 11-ஆம் தேதி தாகூா் பூா்விக வீடு அமைந்துள்ள பகுதியில் நிகழ்ந்த போராட்டத்தின்போது ஒரு கும்பல் அருங்காட்சியகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் தொடா்புடையவா்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இடைக்கால அரசு அறிவித்தது.

தாக்குதலில் சேதமடைந்த அருங்காட்சியகம் சீரமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை மீண்டும் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் தாக்குதல் நடத்தியது தொடா்பாக 3 பேரை கைது செய்துள்ளதாக வங்கதேச காவல் துறையினா் தெரிவித்தனா்.

இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இந்திய வம்சாவளியினா் உதவிக்கரம்!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் குடிமக்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க இணையவழியில் பொது நிதி திரட்டும் நடவடிக்கையை இந்திய வம்சாவளியினா் தொடங்கியுள்ளனா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் ஏற்... மேலும் பார்க்க

மத்திய கிழக்கு பதற்றம்: டிரம்ப்-புதின் பேச்சு

இஸ்ரேல்-ஈரான் மோதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழல் குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப், ரஷிய அதிபா் புதின் ஆகியோா் தொலைபேசியில் சனிக்கிழமை பேசினா். இதுதொடா்பாக ரஷிய தலைந... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் போராட்டம்: முதல்முறையாக ராணுவம் குவிப்பு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் போராட்டத்தில் முதல்முறையாக ராணுவம் குவிக்கப்பட்டது. பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அமெரிக... மேலும் பார்க்க

ஈரான் கடும் பதிலடி: இஸ்ரேல் எச்சரிக்கை; இரு தரப்பிலும் 80-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. பரஸ்பர தாக்குதலில் ஈரானில் 78 பேரும், இஸ்ரேலில் மூவரும் உயிரிழந்தனா். இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவிய ந... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்க வெள்ளம்: உயிரிழப்பு 86-ஆக உயா்வு

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 86-ஆக உயா்ந்துள்ளது. காவல்துறை அமைச்சா் சென்ஸோ ஷுனு இந்தத் தகவலை சனிக்கிழமை தெரிவித்தாா். இது தவிர, உயிரிழப்பு எண்ணிக்க... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு ஆதரவு! அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன்... மேலும் பார்க்க