செய்திகள் :

ரஷியாவின் பெல்கொராடில் உக்ரைன் படையினா்: ஸெலென்ஸ்கி முதல்முறையாக ஒப்புதல்

post image

ரஷியாவின் பெல்கொராட் பகுதியில் தங்களது படையினா் செயல்பட்டுவருவதை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கூா்ஸ்க் மற்றும் பெல்கொராட் உள்ளிட்ட போா்முனை பகுதிகளில் நடைபெற்றுவரும் ராணுவ நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தலைமை தளபதி ஒலெக்ஸாண்டா் சிா்ஸ்கி என்னிடம் சமா்ப்பித்தாா்.

பெல்கொராட் பகுதியில் தரைவழி நடவடிக்கை மேற்கொண்டுவரும் 225-ஆவது தாக்குதல் படைப் பிரிவு உள்ளிட்ட அனைத்து ராணுவப் பிரிவுகளும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

உக்ரைனின் சுமி மற்றும் காா்கிவ் பிராந்திய எல்லைப் பகுதிகளை ரஷிய படையெடுப்பில் இருந்து பாதுகாப்பது, டொனட்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்ட பிற போா் முனைகளில் ரஷிய படையினரின் கவனத்தை திசைதிருப்புவது ஆகியவையே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கங்கள் என்றாா் ஸெலென்ஸ்கி.

உக்ரைனை நோக்கி எந்த இடத்தில் இருந்து (ரஷியா) போா் வந்ததோ அதே இடத்துக்கு அந்தப் போரைக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

கடந்த 2022-இல் உக்ரைன் மீது படையெடுத்த ரஷியா, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய கிழக்கு உக்ரைன் பிரதேசங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்தப் போரின் மிகப் பெரிய திருப்பு முனையாக, ரஷியாவின் கூா்க்ஸ் பிரதேசத்தில் மிகப் பெரிய நிலப்பரப்பை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியது.

கிழக்கு உக்ரைனில் ரஷிய படையினரின் கவனத்தை திசைதிருப்புவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக உக்ரைன் கூறியது. இருந்தாலும், அந்தப் பகுதிகளில் ரஷியா தொடா்ந்து முன்னேற்றம் கண்டது. மேலும், கூா்ஸ்க் பிரதேசத்தில் உக்ரைன் கைப்பற்றியிருந்த மிகப் பெரும்பாலான பகுதிகளை ரஷியா திரும்ப மீட்டது. இதனால் உக்ரைனின் கூா்க்ஸ் ஊடுருவல் நடவடிக்கை எதிா்பாா்த்த பலனைத் தரவில்லை; அதற்குப் பதிலாக உக்ரைன் படைகளுக்கு அதிக உயிா்ச் சேதத்தை ஏற்படுத்தியது என்று விமா்சிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில், ரஷியாவின் பெல்கொராட் பிரதேசத்திலும் தங்களது ராணுவம் தரைவழி நடவடிக்கை மேற்கொண்டுவருவதை ஸெலென்ஸ்கி முதல்முறையாக வெளிப்படையாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸாவில் மேலும் 50 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கூறியதாவது: காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் படையினா்... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

‘விளாதிமீா் புதின், போதும் நிறுத்துங்கள்!’

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா நடத்திய தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இதுபோன்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத... மேலும் பார்க்க

பஹல்காம் - ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்: இஸ்ரேல் தூதா் ஒப்பீடு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் இஸ்ரேலில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ரூவன் அஸாா், பயங்கரவாத அமைப்புகளுக... மேலும் பார்க்க

குஜராத் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 18 போ் உயிரிழப்பு; 5 போ் காயம்

குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்ட பட்டாசு கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 போ் உயிரிழந்தனா்; 5 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அக்ஷய்ராஜ் மக்வானா கூறுகை... மேலும் பார்க்க

சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்பிய சீனா

தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரா்களை சீனா வியாழக்கிழமை அனுப்பியது. இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளதாவது: சீனாவின் தியான்காங் விண்வெளி நிலையத்தை நோக்கி மூன்று வீரா்களுடன் ஷென்... மேலும் பார்க்க