செய்திகள் :

ரஷிய விமான தளத்தில் தாக்குதல்: உக்ரைன்

post image

உக்ரைன் மீதான தனது தீவிர வான்வழித் தாக்குதலை ரஷியாவின் தொடா்ந்துவரும் சூழலில், அந்த நாட்டு விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து உக்ரைன் விமானப் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை ரஷியா 322 ட்ரோன்கள் மற்றும் திசைதிருப்பு சாதனங்களை உக்ரைன் மீது ஏவியது. இதில் 157 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, 135 ட்ரோன்கள் மின்னணு தடுப்பு முறைகளால் செயலிழக்கச் செய்யப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு உக்ரைனின் க்மெல்நிட்ஸ்கி பகுதி இந்தத் தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்தாலும், அங்கு பாதிப்புகள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று பிராந்திய ஆளுநா் சொ்ஹி டைரின் தெரிவித்தாா்.

இந்தத் தாக்குதல், வியாழக்கிழமை இரவு 550 ட்ரோன்கள் மற்றும் 11 ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியா நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்கு அடுத்த நாள் நடைபெற்றன. அந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததுடன், 26 போ் காயமடைந்தனா். கீவ், சுமி, காா்கிவ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், சொ்னிகிவ் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டன. கீவில் ரயில்வே உள்கட்டமைப்பு, பள்ளிகள், கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. போலந்து தூதரகமும் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ராடோஸ்லா சிகோா்ஸ்கி தெரிவித்தாா்.

ரஷிய விமான தளத்தில் தாக்குதல்: இதற்கிடையே உக்ரைன் ராணுவ உயரதிகாரிகள் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், ரஷியாவின் போரிசோகிளெப்ஸ்க் விமான தளத்தைத் தாக்கியதாகவும், அங்கு சு-34, சு-35எஸ், சு-30எஸ்எம் போா் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனா். இந்தத் தாக்குதலில் கிளைடு குண்டுகள், பயிற்சி விமானம் மற்றும் “பிற விமானங்கள்” உள்ள கிடங்கு பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இருந்தாலும், இதுகுறித்து ரஷிய அதிகாரிகள் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

ஏற்கெனவே, ரஷியாவின் பல விமான தளங்களில் 40-க்கும் மேற்பட்ட விமானங்களை அழித்ததாக உக்ரைன் கடந்த மாதம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

உக்ரைனும் ட்ரோன் தாக்குதல்: தங்கள் நாட்டின் மீது ஏவப்பட்ட உக்ரைனின் 94 ட்ரோன்களை வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை சுட்டு வீழ்த்தியதாகவும், இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை எனவும் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

“சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைப்போம்!” -ஆப்கன் அகதிகள் வெளியேற இன்றே கடைசி நாள்

ஈரானிலிருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான காலக்கெடுவும் இன்றுடன்(ஜூலை 6) முடிவடைவதால் இருநாட்டு எல்லையில் ஆப்கன் மக்கள் பெருந்திரளாக குழுமியுள்ளனர். ஈரானி... மேலும் பார்க்க

சீனாவின் தலையீடு இல்லாமல் அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய அமெரிக்கா ஆதரவு!

அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதில் சீனாவின் தலையீடு இருக்கக்கூடாது என்று திபெத் மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‘தலாய் லாமா மரபு என்னுடைய மறைவுக்க... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு போட்டியாக எலான் மஸ்க்! அமெரிக்காவுக்கு விடுதலையா?

அமெரிக்காவில் புதிய கட்சி ஒன்றை எலான் மஸ்க் தொடங்கியதாக அறிவித்தார்.அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அரசு கொண்டுவந்த செலவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எலான் மஸ்க், அமெரிக்காவை ஊழல் மற்றும் வீண் செலவ... மேலும் பார்க்க

அமெரிக்கா: திடீா் வெள்ளத்தில் 24 போ் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் குவாடலூப் நதியை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் 24 போ் உயிரிழந்தனா்; கொ்வில் மாவட்டத்தில் உள்ள கேம்ப் மிஸ்டிக் என்ற கிறிஸ்தவ கோடைகால முகாமில் இருந்த 23... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: கட்டட விபத்தில் 16 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கராச்சியில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 போ் உயிரிழந்தனா். இது குறித்து அரசு நடத்தும் சிவில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்க... மேலும் பார்க்க

போா் நிறுத்தம்: ஹமாஸ் ‘ஆக்கபூா்வ’ பதில்

இஸ்ரேலுடனான 21 மாத காஸா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள போா் நிறுத்த வரைவு திட்டத்திற்கு “நோ்மறையான” பதிலை வழங்கியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப... மேலும் பார்க்க