செய்திகள் :

ரஷ்யா உடன் வர்த்தகம்: நெருக்கும் ட்ரம்ப் - முக்கியத்துவம் பெறும் புதினின் இந்திய வருகை!

post image

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வருகை தருவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார்.

புதினின் வருகை குறித்து ரஷ்யா தரப்பில் எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை. அஜித் தோவல், புதின் எந்த தேதியில் வருவார் எனக் குறிப்பிடவில்லை. இன்டெர்ஃபாக்ஸ் செய்திதளம் கூறுவதன்படி, இந்த ஆண்டின் இறுதியில் புதின் ரஷ்யா வரக்கூடும்.

அஜித் தோவல் சொன்னதென்ன?

Ajit Doval
Ajit Doval

அஜித் தோவல், "ரஷ்யாவுடன் சிறப்பான நீண்டகால உறவு உள்ளது. நாம் அதனை மதிக்கிறோம்... ரஷ்ய அதிபர் இந்திய வருகை குறித்து உற்சாகமாக இருக்கிறோம். தேதிகள் இப்போது இறுதி செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

ரஷ்யாவுடன் வர்த்தகம் - உக்ரைன் போருக்கு எரிபொருள்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்வதால் கூடுதல் வரிவிதித்துள்ளார். இது இரண்டு நாடுகளுக்கும் இடையில் உரசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் உடனான போருக்கு எரிபொருள் ஊற்றுவதாக அமெரிக்கா விமர்சித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி 25% வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டதுடன், 6ம் தேதி கூடுதலாக 25% வரியை விதித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் ரஷ்ய அதிபர் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார் ட்ரம்ப்.

புதின் - ட்ரம்ப் சந்திப்பு

புதின் இந்தியா வருவதற்கு முன்பு ட்ரம்ப்பை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா தரப்பில் இது குறித்து ஏற்கெனவே அறிவித்திருக்கின்றனர்.

ரஷ்ய ஜனாதிபதியின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ், இருதரப்பும் ஒரு சந்திப்பை நடத்த செயலாற்றி வருவதாகவும், அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது என்றும் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

தலைவர்களின் சந்திப்புகளுக்குப் பிறகு அரசியல் களத்தின் தன்மையில் மாற்றம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை!" - தொல்.திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"தம... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழு முதல் விசிக ஆர்ப்பாட்டம் வரை - 09.08.2025 முக்கியச் செய்திகள்!

Pஆகஸ்ட் 9 முக்கியச் செய்திகள்தேனி பங்களாமேடு பகுதியில் 14 வயது சிறுவன் பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் என்ஜின் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சல்மான் கானை தொடர்பு கொண்டதற்கா... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை" - எடப்பாடி பழனிசாமி காட்டம்

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எம்ஜிஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமானவர். அப்படிப்பட்டவரை விமர்... மேலும் பார்க்க

'பக்கம் எண் 44, வாக்குறுதி எண் 285' - திமுகவின் வாக்குறுதியும் பொய் பேசிய சேகர் பாபுவும்?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராடி வருகின்றனர். தங்கள் மண்டலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பது பணி நிரந்தரமுமே அவர்களின் கோரிக்கை. போராட்டக்குழுவுடன் ப... மேலும் பார்க்க

கமல் ஹாசன்: "தேவையற்ற பொதுத் தேர்வுகள், அநீதியான நுழைவுத் தேர்வுகள்" - முதலமைச்சரை பாராட்டிய கமல்!

பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், "இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிற... மேலும் பார்க்க

"3, 5, 8ம் வகுப்பு பிள்ளைகளுக்கு தேர்வு வைப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்" - சீமான் பேச்சு!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிற... மேலும் பார்க்க