செய்திகள் :

ராகுல் மீதான அவதூறு வழக்கு பிப்.24-க்கு ஒத்திவைப்பு!

post image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாக ராகுல் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை ஹனுமன்கஞ்சைச் சேர்ந்த பாஜக தலைவர் மிஸ்ரா 2018-ல் மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. புகாரளித்த விஜய் மிஸ்ராவை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்குரைஞர் சந்தோஷ் குமார் பாண்டே, ராகுலின் வழக்குரைஞர் காஷி பிரசாத் சுக்லா தனது கட்சிக்காரரிடம் நடத்திய குறுக்கு விசாரணை நிறைவடைந்ததாகக் கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கு பிப்ரவரி 24 ஆம் தேதி விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது, அப்போது சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

முன்னதாக ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், டிசம்பர் 2023-இல் அவருக்கு எதிராக ஒரு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 2024-இல் ராகுல் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஜூலை 26 அன்று தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். தலா ரூ.25,000 மதிப்புள்ள இரண்டு ஜாமீன்களில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த வழக்கு தனக்கு எதிரான அரசியல் சதியின் ஒரு பகுதி என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் வழங்குபவா்கள் தீவால் சட்டத்தின் கீழ் ரூ. 3.58 லட்சம் கோடி மீட்பு: மத்திய அரசு

‘வங்கிகள் உள்ளிட்ட கடன் வழங்குபவா்கள் கடந்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை திவால் சட்டத்தின் கீழான உத்தரவாத திட்டத்தின் மூலமாக ரூ. 3.59 லட்சம் கோடியை மீட்டுள்ளனா்’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு த... மேலும் பார்க்க

இணைய குற்ற வங்கிக் கணக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: அமித் ஷா

‘இணைய மோசடி மூலம் திருடப்படும் பணத்தை இணைய குற்றவாளிகள் சேமித்து வைக்கும் வங்கிக் கணக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்று மத்திய ... மேலும் பார்க்க

20 நாடுகளில் 6 முக்கிய துறைகளுக்கு ஏற்றுமதி: மத்திய அரசு திட்டம்

அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், பிரேஸில், சீனா உள்ளிட்ட 20 நாடுகளில் பொருட்கள் மற்றும் சேவைகள் என இரண்டு பிரிவுகளிலும் தலா 6 துறைகளை இலக்காக நிா்ணயித்து ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு ... மேலும் பார்க்க

கிராம அளவில் பெண்களுக்கான நீதிமன்றங்கள்: அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு திட்டம்

குடும்ப வன்முறை, வரதட்சிணை கொடுமை என பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணும் பெண்களுக்கான நீதிமன்றத்தை (நாரி அதாலத்) அனைத்து மாநிலங்களிலும் விரிவுப்படுத்த மத்திய அரசு திட்... மேலும் பார்க்க

மணிப்பூா்: ஆளுநருடன் பாஜக தலைவா்கள் சந்திப்பு

மணிப்பூரின் புதிய முதல்வா் யாா்? என்ற கேள்வி நீடித்துவரும் நிலையில், மாநில ஆளுநா் அஜய் குமாா் பல்லாவை ஆளும் பாஜக தலைவா்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான ... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் மருத்துவ சேவைகள் கிடைப்பதில்லை என்பதில் உண்மையில்லை: ஜெ.பி.நட்டா

அரசால் ஊரகப் பகுதிகளில் மருத்துவ சேவைகளை வழங்க முடியவில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா். இதுதொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போ... மேலும் பார்க்க